Posts

யாத்ரன் 24

Image
யாவும் நின் யாத்ரனாய்..  EPISODE 24 விடிந்ததுமே ஊரை விட்டு சென்றுவிட்டான் யாத்ரன். அவன் முன்னே முடிந்தளவுக்கு அழுகையை அடக்கியிருந்தவள் அவன் அமர்ந்திருந்த கார் கண்ணிலிருந்து மறைந்ததும் அறையை நோக்கி ஓடினாள். அர்ச்சனாவுக்கு ஏதோ சரியில்லை என்று மட்டும் நன்றாகத் தெரிந்தது. ஆனால், மகளிடம் கேட்கவில்லை அவர். அறையை தாழிட்டு கதவிலேயே சாய்ந்தமர்ந்த ஜான்சி, கால்களை கட்டிக்கொண்டு வாயைப் பொத்தி ஏங்கி ஏங்கி அழுதாள். அவளால் இந்த வலியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. காதல் இத்தனை வலியை கொடுக்குமென்று தெரிருந்திருந்தால் அந்த திசை பக்கமே சென்றிருக்க மாட்டாளோ என்னவோ! அதேநேரம் இங்கு காரில் சென்றுக்கொண்டிருந்த யாத்ரனின் முகம் பாறைப் போல் இறுகிப் போயிருந்தது.  'அவ என்னை விட்டு போகணும்னுதானே நான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். இப்போ அவளே என் வாழ்க்கைய விட்டு போயிட்டா, ஆனா நா.. நான் என்ன யோசிச்சிக்கிட்டு இருக்கேன்?'  தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டவனுக்கு தன் கேள்விகளுக்கான பதில்தான் தெரியவில்லை. அவனுக்குள் ஏனென்று தெரியாத கோபம் வேறு.. உணர்ச்சிகளை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு தன் நாட்டிற்கு போய் சேர்ந்தவன் ...

யாத்ரன் 23

Image
யாவும் நின் யாத்ரனாய்... EPISODE 23  "அதான் ஊரை விட்டு துரத்தியாச்சுல்ல, இவ எப்படி ஊருக்குள்ள வந்திருக்கா? அவள இங்கயிருந்து துரத்திவிடுங்க!" "ஆமா ஆமா... அந்த மானங்கெட்டவளுக்கு எம்புட்டு தைரியம் இருக்கணும்! ஊரை விட்டு ஒதுக்கி வச்சும் தைரியமா ஊருக்குள்ள நுழைஞ்சிருக்கா" "அவள யாராச்சும் ஊரை விட்டே அடிச்சு துரத்துங்கடா..." காரிலிருந்து இறங்கிய ஜான்சியைப் பார்த்ததும் ஆளாளுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர் ஊர் மக்கள். "நாம வந்திருக்க கூடாதோ?" என்று ஜான்சி கலங்கிய குரலில் கேட்டவாறு பின்னோக்கி நகர, ஒருசில ஊர்க்காரர்களோ வேகமாக அவர்களை நோக்கி வந்தனர். ஆனால், எதற்கும் அசரவில்லை யாத்ரன். ஏற்கனவே இந்த ஊர் மக்கள் மீது கொலைவெறியில் இருப்பவனுக்கு இவர்களை புரட்டியெடுக்க வாய்ப்பு கிடைக்காதா என்றுதான் இருந்தது. சட்டைக் கையை மடித்து விட்டவாறு அவன் அவர்களை நோக்கிச் செல்லப் போக, "கொஞ்சம் நிறுத்துறீங்களா!" என்ற கத்தல் அந்த இடத்தையே நிரப்பியது. மொத்தப் பேரும் சத்தம் வந்த திசையை நோக்க, அங்கு நின்றிருந்தார் அர்ச்சனா. திருமணமாகி இந்த ஊரிற்கு வந்து இத்தனை வருடங...

யாத்ரன் 22

Image
யாவும் நின் யாத்ரனாய்..  EPISODE 22 "ஹேய் லுக்,  அவ கொஞ்சம் கூட யாத்ரனுக்கு பொருத்தமே இல்ல. ஐ கான்ட் டோலரேட் திஸ்"  யாத்ரனோடு எப்போதும் கொஞ்சிக் குழாவும் ரேஷ்மாவுக்கு ஜான்சியைப் பார்க்கப் பார்க்க பற்றிக்கொண்டு வந்தது. "ரேஷ், அவனுக்கு கல்யாணம் ஆனதையே மறைச்சிருக்கான். என்னால இப்போ வரைக்கும் அதைதான் டோலரேட் பண்ணவே முடியல. நீ என்னடான்னா..." என்று கவின் அதிர்ச்சி குறையாத குரலில் சொல்ல, ரேஷ்மா எரிச்சலோடு விழிகளை உருட்டினாள். யாத்ரன், விதுஷா மற்றும் ராஜ்தீப் தத்தமது தொழில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்க, தனியாக விடப்பட்டாள் ஜான்சி. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ரேஷ்மாவுக்கு உள்ளுக்குள் ஒரு திட்டம் தோன்ற, கைகளைப் பிசைந்தவாறு சிறு பதற்றத்தோடு நின்றிருந்தவளின் அருகே மெல்ல சென்றாள். "ஹேய் ஹாய்... ஹவ் ஆர் யூ? மே ஐ நோ யூவர் நேம்" என்று அவள் ஆங்கிலத்தில் பேச, புரியாமல் விழித்த ஜான்சியோ அசடுவழிந்தவாறு தலையாட்டி வைத்தாள். 'அய்யோ யார் கூடவும் பேச கூடாதுன்னு சொன்னாரே, இதுக்காகதானா! இப்போ என்ன பண்றது? முகத்த திருப்பிக்கிட்டு போனா அவங்க மனசு கஷ்டப்படுவாங்களே' அ...

யாத்ரன் 21

Image
யாவும் நின் யாத்ரனாய்... EPISODE 21 "என்னங்க... என்னங்க..." என்ற ஜான்சியின் அழைப்பு காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாதது போல் தன் நண்பனொருவனுக்கு அவசரமாக அழைத்துக்கொண்டிருந்தான் யாத்ரன். அவளோ கையில் பால் க்ளாஸோடு நின்றுக்கொண்டிருக்க, சில கணங்களில் யாத்ரனின் அழைப்பு மறுமுனையில் ஏற்கப்பட்டது. "ஹேய் மேன், நான் சொன்ன விஷயம் என்னாச்சு?" யாத்ரன் ஆர்வத்தோடுக் கேட்க, மறுமுனையிலோ சில கணங்கள் அமைதிக்கு பின் பதில் வந்தது. "அது... யாத்ரா, என் அங்கிள் ஒரு ஹிஸ்ட்ரி ப்ரொஃபெஸ்ஸர், நீ சொன்னதை பத்தி அவர்கிட்ட பேசினேன். பட்... அதை பத்தி எந்த ஹிஸ்ட்ரி ரெக்கார்டும் இல்லன்னு சொல்றாரு. அந்த இடத்த பல பேர் ரூல் பண்ணியிருக்காங்க. எல்லாரோட பேரும் ஹிஸ்ட்ரில ரெக்கார்ட் ஆகல. தடையமே இல்லாம அழிஞ்சவங்களும் இருக்காங்க"  யாத்ரனுடைய தோழன் ஜோஷ்வா இதைப் பற்றி அவனுக்கு விளக்க, ஏமாற்றத்தில் முகம் கருத்தது அவனுக்கு. "பட்  ஐ வோன்ட் டூ நோ அபௌட் தட் ஜோஷ்வா, வேற எந்த வழியும் இல்லயா?" அவன் கடைசி முயற்சியாகக் கேட்க, "நோ யாத்ரா, மே பீ காலங்காலமா அந்த ஊர்லயே இருந்தவங்களுக்கு தெரிஞ்சிருக்க வா...

யாத்ரன் 20

Image
  யாவும் நின் யாத்ரனாய்..  EPISODE 20 ஏற்கனவே தாமதமாகி விட்டது. பதறிப் பதறி தயாராகிக் கொண்டிருந்தவனுக்கு அப்போதுதான் காலை நடைப் பயிற்சி முடிந்து அலைப்பேசியை சோஃபாவில் விட்டது ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டவன் வேகமாக அறையிலிருந்து வெளியேறி அதை எடுக்கப் போக, விதுஷாவோ மகனைப் பிடித்துக்கொண்டு அவனின் அவசரம் புரிராமல் வழவழக்க ஆரம்பித்துவிட்டார். அதேநேரம் யாத்ரன் இருப்பதை அறியாது அறைக்குள் நுழைந்தாள் ஜான்சி. "இந்த வீட்டுல தொலைஞ்சு போனா கூட கண்டுபிடிக்க வருஷ கணக்காகும் போல. எத்தனை ரூமு, எத்தனை படிக்கட்டு. ஸப்பாஹ்... முடியல. அதுவும் ஒரு பால் க்ளாஸ வச்சுக்கிட்டு லோலோன்னு அலைய வேண்டியதா இருக்கு. ச்சே!"  புலம்பிக்கொண்டே அறைக்குள் நுழைந்தவள் உள்ளே யாரும் இல்லாததைப் பார்த்து மானசீகமாக தலையிலடித்துக்கொண்டாள். "அச்சச்சோ! அவர் போயிட்டாரு போலயே, என்ன சொல்லாம கொல்லாம கெளம்பிட்டாரு?" என்று அவள் வாய்விட்டு கேட்க, 'என்னைக்கு அவன் சொல்லிட்டு போயிருக்கான், இஷ்டத்துக்கு கதையடிக்குற' என பதிலுக்கு கேலி செய்தது அவளுடைய மனசாட்சி. அதை ஓரந் தள்ளியவள் ...

யாத்ரன் 19

Image
யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 19  'கடவுளே என் புருஷன் என்னை ஏத்துக்கணும்' என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு ஒரு எலுமிச்சம் பழத்தை தன் தலை மேல் சுற்றிக்கொண்டிருந்தாள் ஜான்சி. நடு ஹாலில் அந்த நட்டநடு  ராத்திரியில் இவள் செய்யும் செயலில் விதுஷாவுக்குதான் தூக்கி வாரிப்போட்டது. 'என்ன பண்றா இவ.. ஆத்தீ! ஒருவேள இவள ஏத்துக்கலன்னு வீட்டுக்கு சூனியம் கீனியம் வக்கிறாளோ?'  தனக்குள் பதறியவர் ஒரே ஓட்டமாக அறைக்குள் ஓடிச் சென்று ஒளிந்துக்கொள்ள, ஜான்சியோ எதையும் உணராமல் தன் பரிகாரத்தை முடிப்பதிலேயே குறியாக இருந்தாள். அன்றைய இரவு கழிந்து அடுத்தநாளும் விடிந்தது. நேற்றிரவு பரிகாரம் செய்த எலுமிச்சம் பழத்தை கரங்களுக்குள் பொத்தி தலைமேல் உயர்த்தி கும்பிட்டவள் ஏதேதோ வாய்க்குள் முணுமுணுத்துவிட்டு அதைக்கொண்டே லெமன் ஜூஸ் தயாரிக்க, மகனின் அறைக் கதவை தட்டி உள்ளே நுழைந்தார் விதுஷா. ஆஃபீஸுக்காக தயாராகிக்கொண்டிருந்தவன் வெளியே எட்டிப் பார்த்த வண்ணம் அறைக்குள் நுழைந்த தாயை புரியாமல் பார்த்து வைக்க, "யாத்ரா, வாட் த ஹெல் இஸ் ஹேப்பனிங் ஹியர்?" என்று கத்தினார் அவர். ஆடவனுக்கு வந்ததும் வராததுமா...