யாத்ரன் 24
யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 24 விடிந்ததுமே ஊரை விட்டு சென்றுவிட்டான் யாத்ரன். அவன் முன்னே முடிந்தளவுக்கு அழுகையை அடக்கியிருந்தவள் அவன் அமர்ந்திருந்த கார் கண்ணிலிருந்து மறைந்ததும் அறையை நோக்கி ஓடினாள். அர்ச்சனாவுக்கு ஏதோ சரியில்லை என்று மட்டும் நன்றாகத் தெரிந்தது. ஆனால், மகளிடம் கேட்கவில்லை அவர். அறையை தாழிட்டு கதவிலேயே சாய்ந்தமர்ந்த ஜான்சி, கால்களை கட்டிக்கொண்டு வாயைப் பொத்தி ஏங்கி ஏங்கி அழுதாள். அவளால் இந்த வலியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. காதல் இத்தனை வலியை கொடுக்குமென்று தெரிருந்திருந்தால் அந்த திசை பக்கமே சென்றிருக்க மாட்டாளோ என்னவோ! அதேநேரம் இங்கு காரில் சென்றுக்கொண்டிருந்த யாத்ரனின் முகம் பாறைப் போல் இறுகிப் போயிருந்தது. 'அவ என்னை விட்டு போகணும்னுதானே நான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். இப்போ அவளே என் வாழ்க்கைய விட்டு போயிட்டா, ஆனா நா.. நான் என்ன யோசிச்சிக்கிட்டு இருக்கேன்?' தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டவனுக்கு தன் கேள்விகளுக்கான பதில்தான் தெரியவில்லை. அவனுக்குள் ஏனென்று தெரியாத கோபம் வேறு.. உணர்ச்சிகளை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு தன் நாட்டிற்கு போய் சேர்ந்தவன் ...