Posts

விழிகள் 25

Image
அரண்மனை வளாகத்துக்குள் மறைந்திருந்தவள் அங்கிருந்த நீண்ட ஜன்னலின் கதவு திறந்திருப்பதைப் பார்த்து வேகமாக அதை நோக்கி ஓட, அங்கு சுற்றியிருந்த காவலர்களின் விழிகளுக்கு சிக்கிக்கொண்டாள் அவள். "ஹேய்.. வூ ஆர் யூ? ஸ்டாப்! கார்ட்ஸ்... கார்ட்ஸ்..." என்று அவன் எல்லோருக்கும் குரல் எழுப்பி கத்திக்கொண்டு அவளை நோக்கி ஓடி வர, அதிர்ந்து விழித்தவள் உடனே சுதாகரித்து ஜன்னல் வழியே அறைக்குள் நுழைந்து ஜன்னல் கதவை வேகமாக மூடிக்கொண்டாள். சுற்றி பரபரப்பு நிலவ, ஜன்னல் கதவை அவர்கள் வேகமாக தட்ட ஆரம்பிக்கவும் இவளுக்கு ஏன்தான் இங்கு வந்தோம் என்று அந்த நொடி தோன்றியது.  வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்டவளுக்கு பயத்தில் உடலெல்லாம் நடுங்க, எதுவும் யோசிக்கக் கூட தோன்றவில்லை. உடல் முழுவதும் பதற்றத்தில் வியர்க்க ஆரம்பிக்க, உடனே அந்த அறைக் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தவள் எந்த பக்கம் செல்வதென்று கூட தெரியாமல் கால் போன திசைக்கு அந்த வராண்டாவில் ஓட ஆரம்பித்தவள். திடீரென சில அதிகாரிகளின் காலடி சத்தம் கேட்க, பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்துக்கொண்டாள் யாழ்மொழி. 'அய்யோ க...

விழிகள் 24

Image
"லியோ..." என்று க்ரிஸ்டியின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, "ஐ வோன்ட் டூ டோக் டூ யூ" என்று இறுகிய குரலில் சொன்னவன் அவளுடைய அனுமதியைக் கூட கேட்காது வீட்டிற்குற் நுழைந்தான். க்ரிஸ்டியும் யோசனையோடு கதவை சாற்றிக்கொள்ள, அடுத்த அரைமணி நேரம் என்ன பேச்சு வார்த்தை நடந்ததோ! அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவளின் இதழ்கள் புன்னகைத்தாலும் விழிகள் அத்தனை வலியை பிரதிபலித்தன. "சீ யூ க்ரிஸ்டி" என்று தான் வந்த வேலை முடிந்ததென அவன் அங்கிருந்து சென்றுவிட, விழியோரம் கசிந்த விழிநீரை துடைத்தெறிந்து விட்டு போகும் தன் முன்னால் காதலனை ஏக்கத்தோடு பார்த்திருந்தாள் அவள். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், அன்று காலையில் எழுந்ததிலிருந்து வழமை போல் மற்ற பணிப்பெண்களின் குத்தல் பேச்சுகளோடே யாழ்மொழியின் நேரம் கடக்க, இருந்த மொத்த வேலைகளையும் முடித்துவிட்டு வெளியே செல்வதற்கு தயாரானாள் அவள். "உன் காதலன்தான் இங்கு இல்லையே, பிறகு எதற்கு வெளியே செல்கிறாய் யாழ்? ஓஹோ... ஒருவேளை இது வேற ஒரு ஆங்கிலேய அதிகாரியோ? கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வதும் எதிர்காலத்துக்கு நல்லதுதானே...

விழிகள் 23

Image
இத்தனை நேரம் வீரா பேசியதை நினைத்து உறக்கமின்றி அழுது கரைந்த இந்திரா அப்போதுதான் மெல்ல விழிகளை மூடி ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல, திடீரென அவளுடைய அறைக்குள் நுழைந்தது அந்த உருவம். அவளுடைய அறையில் தடுமாறிய அந்த நிழலுருவம் இப்போது உறங்கிக்கொண்டிருந்த இந்திராவை மெல்ல நெருங்க, உள்ளுக்குள் மனம் எச்சரிக்க பட்டென்று விழிகளைத் திறந்தவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. "ஆஆ..." என்று அதிர்ச்சியில் கத்தப் போனவளின் வாயை உடனே பொத்திக்கொண்ட வீரா, "எதுக்கு இப்போ கத்துற, அதான் நான்தான்னு தெரியுதுல்ல. அப்பறமென்ன?" என்று பதற்றமாகக் கேட்க, அவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தாள் இந்திரா. தன் வாயை பொத்தியிருந்த அவனின் கரத்தை உதறிவிட்டவள், "என்ன விளையாட்டு இது வீரா, காவலர்கள் யாராவது பார்த்தால் அவ்வளவுதான். முதலில் இங்கிருந்து செல், இல்லையென்றால்..." என்று பொரிந்துக்கொண்டே போக, "அரசருக்கே நம்ம விஷயம் தெரிஞ்சிருச்சு. இதுக்கப்பறம் எதுக்கு நான் ஓடி ஒளியணும்? பார்த்துக்கலாம்" என்றவன் சோம்பல் முறித்தவாறு அவளுடைய கட்டிலில் படுத்துக்கொண்டான். அவனை முறைத்துப் பார்த்தவள், "எதுவ...

விழிகள் 22

Image
அதேநேரம் இங்கிலாந்தில், ஜன்னல் வழியே மைதானத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த அதிகாரிகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் லியோ. "லியோ.. உன்ன எவ்வளவு நேரம் கூப்பிடுறது, அங்கயிருந்து வந்ததுலயிருந்து ஒரு  மாதிரியாவேதான் இருக்க. சரி அதை விடு, இந்த ஃபைல நீ செக் பண்ணிட்டேன்னா ஆஃபீஸ்க்கு சப்மிட் பண்ணிடலாம்" என்று அரசாங்கத்தில் பணி புரியும் அவனின் தோழன் ஜஸ்டின் சொல்ல, "செக் பண்ணிட்டேன்" என்றுவிட்டு சலிப்பாக விழிகளை உருட்டினான் மற்றவன். ஜஸ்டினுக்கு சிறு சந்தேகம் எழ, வேகமாக அதையெடுத்துப் பார்த்தவன், "செக் பண்ணிட்டேன்னு சொன்ன, இதுல நிறைய எரர்ஸ் இருக்கு லியோ. இப்படி மட்டும் சப்மிட் பண்ணியிருந்தா ப்ரெசிடென்ட் நம்மள இங்கயிருந்து துரத்தியே விட்டிருப்பாரு" என்றான் அதிர்ச்சியோடு. ஆனால் லியோவின் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் வெளிப்படவில்லை.  "ஓ.." என்று மட்டும் சொன்னதோடு அவன் பாட்டிற்கு இருக்கையில் அமர்ந்து விழிகளை மூடி தலையை பின்னே சாய்த்துக்கொள்ள, மற்றவனுக்கு எல்லாமே புதிதாகத்தான் தெரிந்தது. "ஆர் யூ ஓகே லியோ, உன்கிட்ட எனக்கு ஏதோ வித்தியாசம் தெரியுது....

விழிகள் 21

Image
அடுத்தநாள் மனம் முழுக்க பாரத்தோடு லியோ தன் நாட்டிற்கு திரும்பியிருக்க, அவனின் நினைவுகளால் வாடிப் போனாள் யாழ்மொழி என்றுதான் சொல்ல வேண்டும். 'நிச்சயமாக அவர் என்னைத் தேடி வருவார், ஒருவேளை வராமல் போனால்... அவருடைய நினைவுகளே போதும் நான் வாழ' என்று மட்டும் தனக்குள் நினைத்துக்கொண்டவள் அவனுடைய நினைவுகளோடு நேரத்தைக் கடத்த, அதேநேரம் தன் அறை ஜன்னல் வழியே தோட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் இந்திரா. "வீராவை நான் திருமணம் செய்தால் தந்தை ஆட்சியையே விட்டு விடுவதாக சொல்கிறார் என்றால், ஒரு போதும் தன்மானத்தை இழக்க மாட்டேன் என்று விதாண்டாவாதம் செய்கிறான் அவன். நானும் என்னதான் செய்வது, இருவருக்குமிடையில் சிக்கித் தவிப்பது என்னவோ நான்தான்'  என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தவள் சட்டென அறைக் கதவு தட்டப்படும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள். வேகமாக சென்று அவள் கதவைத் திறக்க, உள்ளே வந்த அரசர் வேந்தனோ அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக்கொள்ள, அவருக்கு பக்கத்தில் தரையில் அமர்ந்துக்கொண்ட இந்திரா தந்தையின் மடியில் தலையை சாய்த்துக்கொண்டாள். "நான் சொன்னதைப் பற்றி சிந்தித்தாயா இந்திர...

விழிகள் 20

Image
லியோவோ படபடவென பேசிக்கொண்டே  சென்றவன் அடுத்து யாழ்மொழி பார்த்த பார்வையில் மனம் பிசைய அதற்குமேல் அவளின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டான். ஜேம்ஸ்ஸிற்கு அவர்கள் பேசிக்கொள்வது புரியாவிட்டாலும் இருவருக்குமிடையில் ஏதோ பிரச்சனை என்று மட்டும் அவனால் நன்றாகவே உணர முடிந்தது. யாழ்மொழியொ விழிநீரை துடைத்தெறிந்து விட்டு அவனை அழுத்தமாகப் பார்த்தவள், "காதல் இல்லாமல்தான் என்னுடன் பழகினீர்களா, காதல் இல்லாமல்தான் எனக்கு அன்று முத்தம் கொடுத்தீர்களா? ஏன் அந்த ஆங்கிலேய அரண்மனையிலிருந்து என்னை காப்பாற்றியது கூட காதலே இல்லாமல்தானா?" என்று தன் கேள்விக் கனைகளைத் தொடுக்க, அவனோ பதிலுக்கு அலட்சியமாக தோளைக் குலுக்கினான். "உன் கூட பழகின ஒரே காரணத்துக்காகதான் நான் உன்னை காப்பாத்தினேன், என்ட் முத்தம் கொடுத்துக்குறது நான் வளர்ந்த சூழல்ல சகஜமான ஒன்னு. அதை நீ காதல்னு எடுத்துப்பேன்னு எனக்கு தெரியல. என்னோட பதவி அதிகாரம் என்னன்னு உனக்கு நல்லாவே தெரியும், அப்படிப்பட்ட பதவில இருக்குற நான் உன்னை மாதிரி ஒரு பணிப்பெண்ண காதலிப்பேன்னு நீ எப்படி நினைக்கலாம்"  என்று அவன் பேசிய வார்த்தைகள் ...