யாத்ரன் 08
யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 08 அன்றிரவு விட்டத்தை வெறித்தவாறு கட்டிலில் படுத்திருந்த யாத்ரனுக்கு ருக்மணியின் வார்த்தைகளே சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்தன. "இதை எப்படி அவளால சாதாரணமா எடுத்துக்க முடியுது, என்னால இதை கொஞ்சமும் ஏத்துக்க முடியல. வெறும் மூடநம்பிக்கைகாக உயிர் பழியா.. ச்சே!" என்று தீவிர யோசனையில் உழன்றுக் கொண்டிருந்தான். அடுத்த கொஞ்ச நேரத்திலேயே அவனுக்கு மெல்ல உறக்கம் தழுவ, மீண்டும் அவனை ஆட்கொண்டது அந்த நினைவுகள். "யாத்ரா, இது எனக்கு சரியா படல. நீ இந்த ஊர்லயே சிறந்த சிற்பிதான் அதுக்காக இளவரசியோட அனுமதியில்லாம அவங்களோட சிலைய பண்ணது ரொம்ப தப்புடா. அரச காவலர்கள்கிட்ட மாட்டிக்கிட்டா அவ்வளவுதான்" என்று ஒருவன் பதற்றமாக சொல்ல, தான் காதலிக்கும் இளவரசியின் உருவத்தை செதுக்கி அதை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு எதுவுமே மூளைக்கு எட்டவில்லை. "அவங்கள சந்திக்கிறதுக்காக இப்படி ஒரு வாய்ப்பு அமைஞ்சா கூட அது எனக்கு சந்தோஷம்தான்" அவனின் குரலில் காதல் மிதக்க, சட்டென காட்சி மாறி அந்த சிலை இருக்கும் ஒரு கோயில் யாத்ரனின் மனக்கண் முன் வந்தது. இப்போது அவனிருக்கும் அதே ஊர...