Posts

யாத்ரன் 08

Image
யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 08 அன்றிரவு  விட்டத்தை வெறித்தவாறு கட்டிலில் படுத்திருந்த யாத்ரனுக்கு ருக்மணியின் வார்த்தைகளே சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்தன. "இதை எப்படி அவளால சாதாரணமா எடுத்துக்க முடியுது, என்னால இதை கொஞ்சமும் ஏத்துக்க முடியல. வெறும் மூடநம்பிக்கைகாக உயிர் பழியா.. ச்சே!" என்று தீவிர யோசனையில் உழன்றுக் கொண்டிருந்தான்.  அடுத்த கொஞ்ச நேரத்திலேயே அவனுக்கு மெல்ல உறக்கம் தழுவ, மீண்டும் அவனை ஆட்கொண்டது அந்த நினைவுகள். "யாத்ரா, இது எனக்கு சரியா படல. நீ இந்த ஊர்லயே சிறந்த சிற்பிதான் அதுக்காக இளவரசியோட அனுமதியில்லாம அவங்களோட சிலைய பண்ணது ரொம்ப தப்புடா. அரச காவலர்கள்கிட்ட மாட்டிக்கிட்டா அவ்வளவுதான்"  என்று ஒருவன் பதற்றமாக சொல்ல, தான் காதலிக்கும் இளவரசியின் உருவத்தை செதுக்கி அதை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு எதுவுமே மூளைக்கு எட்டவில்லை. "அவங்கள சந்திக்கிறதுக்காக இப்படி ஒரு வாய்ப்பு அமைஞ்சா கூட அது எனக்கு சந்தோஷம்தான்"  அவனின் குரலில் காதல் மிதக்க, சட்டென காட்சி மாறி அந்த சிலை இருக்கும் ஒரு கோயில் யாத்ரனின் மனக்கண் முன் வந்தது. இப்போது அவனிருக்கும் அதே ஊர...

யாத்ரன் 07

Image
யாவும் நின் யாத்ரனாய்..  EPISODE 07   தன்னெதிரே நின்றிருந்தவனைப் பார்த்ததும் முதலில் அதிர்ந்த யாத்ரன் பின் கோபத்தைக் கக்க, அவனுக்கு குறையாத கோபத்தோடு நின்றிருந்தான் வரதன். "வரதா நீ..." என்று அவன் ஏதோ சொல்ல வர, "எதுவும் பேசாத, மொதல்ல வீட்டுக்கு போகலாம்" என்று குறுக்கிட்டு ஒவ்வொரு வார்த்தைகளாக அழுத்தி சொன்னவன் வந்த வழியே யார் கண்ணிலும் சிக்காமல் வீட்டிற்கு சென்றான். உள்ளே நுழைந்து கதவைக் கூட தாளிடவில்லை, அதற்குள் தாம்தூம்மென்று கத்த ஆரம்பித்துவிட்டான் யாத்ரன். "என்ன நடக்குது இங்க, உனக்கு.. உனக்கு எல்லா தெரிஞ்சிருக்கு ரைட்! ஆனா நீ எதுவுமே தெரியாத மாதிரி என்கிட்ட நடிச்சிருக்க. அந்த பொண்ண.. அந்த பொண்ண கொன்னுட்டாங்க. மொத்த ஊரும் சேர்ந்து கொன்னுட்டாங்க. வை... ஹவ் கென் யூ டூ தட்? இதை நான் விடப் போறதில்ல, இப்போவே போலீஸ்க்கு போய்..."  என்று படபடவென பொரிந்துவிட்டு வாசலை நோக்கிச் சென்றவனின் கால்கள் வரதனின் அலட்சியமான பார்வையில் சட்டென நின்றன. வரதனோ உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகமாக தோழனைப் பார்த்தவன், "போ.. தாரளமா போய் சொல்லு.. உன்ன எல்லா கண்டுக்கவே மாட்டாங்க. யூ ...

யாத்ரன் 06

Image
யாவும் நின் யாத்ரனாய்  EPISODE 06   "எனக்கு எதுவுமே புரியல, எனக்கு ஏன் இப்படி ஆகுது?" என மீண்டும் மீண்டும் கேட்ட யாத்ரனின் குரலில் ஏனென்று தெரியாத ஒரு நடுக்கம் வெளிப்பட்டது. அவனுடைய கரங்கள் ஜான்சியை மேலும் வளைத்து தன்னோடு அணைத்துக்கொள்ள, அவனின் சூடான மூச்சுக்காற்று அவளுடைய கழுத்தில்  பட்டு பெண்ணவளை கூசச் செய்தது. நினைவு தெரிந்த நாளிலிருந்து எந்தவொரு ஆண்மகனின் ஸ்பரிசத்தையும் உணர்ந்திராதவளை இவன் இறுக்கி அணைத்திருக்க, பாவம் அவளும் என்னதான் செய்வாள்! அந்த அணைப்புக்குள் ஜான்சிக்கு மூச்சு முட்டுவது போலிருக்க, அவளுடைய கரங்கள் அவனை அணைக்கச் செல்வதும் பின் தயங்கி நிற்பதுமாக அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது. யாத்ரனோ அந்த நொடி பயத்தை தவிர வேறு எதையும் உணரவில்லை.  அந்த அணைப்பு என்னவோ சில கணங்கள்தான். ஆனால் ஆயிரமாயிரம் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இருவருக்குள்ளும் சுழல, லேசாக நெளிந்தாள் ஜான்சி. அவள் நெளிந்ததுமே தான் செய்யும் காரியத்தை உணர்ந்த யாத்ரன் சட்டென தலையைத் தூக்கி அவள் முகத்தைப் பார்த்தான். பெண்ணவளின் முகம் செவ்வானமாய் சிவந்திருக்க, அவன் விழிகளைப் பார்க்க தயக்கப்பட்டு குனிந...

யாத்ரன் 05

Image
யாவும் நின் யாத்ரனாய்.. Episode 05  யாத்ரன் உட்பட மொத்த ஊர் மக்களும் கோயிலுக்குள் கூடியிருக்க, ராணி ஜோதியை  வணங்கி அன்றைய பூஜைக்கான சடங்குகளும் ஆரம்பிக்கப்பட்டன. ஏனோ வரதனோடு நின்றிருந்த யாத்ரனனோ இனம் புரியாத ஒரு உணர்வை உணர்ந்தான். ஏதோ ஒன்று அவனோடு நெருக்கமாக இருப்பது போலும் அவனோடு பழக்கப்பட்டது போலும் அவனுக்குத் தோன்ற, சுற்றியிருக்கும் அனைத்தும் மங்கலாகத் தெரிவது போலிருந்தது. தலையை தாங்கிக்கொண்டவன், "எனக்.. எனக்கு என்னாச்சு? ஏன் இப்படிலாம் நடக்குது?" என்று இதயம் படபடக்க தனக்குத்தானே கேட்டு சற்று தடுமாற, பக்கத்திலிருந்த வரதனோ அவனைப் பிடித்துக்கொண்டான். "டேய் யாத்ரா, என்னாச்சு? வீட்டுக்கு போலாமா?" என்று அவன் பதற்றமாகக் கேட்க, "நத்திங் நத்திங்.. ஐ அம் ஓகே, இதெல்லா பழக்கம் இல்லல்ல, அதான்..." என்று சொன்னவாறு விழிகளை அழுந்த மூடித் திறந்தான். சரியாக, ராஜஸ்தானின் கலாச்சார ஆடையில் அலங்காரத்தோடு அத்தனை பேருக்கு நடுவே வந்த பெண்கள் தம் பாரம்பரிய நடனத்தை ஆரம்பிக்க, அந்த கூட்டத்திற்கு நடுவே இருந்தாள் ஜான்சி. ஹோமகுண்டத்தை சுற்றி உடலை வளைத்து நளினத்தோடு அவள் ஆட, யாத்ரனின்...

யாத்ரன் 04

Image
யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 04  ஜான்சி படபடவென பொரிந்துக்கொண்டே போக, அவளை அதிர்ந்துப் போய் பார்த்து நின்றான் யாத்ரன். இதுவரை சோஷியல் மீடியாவில் அரைகுறை ஆடைகளோடு இல்லையென்றால் கிட்டத்தட்ட நிர்வாணமான நிலையில் புகைப்படங்களை பகிரும் பெண்களையே பார்த்து வளர்ந்தவனுக்கு இவளின் பதற்றம் புதிதாகத்தான் தெரிந்தது. அதுவும் அவளுடைய விழிகள் மட்டுமே அந்த புகைப்படத்தில் தெரிய, யாத்ரனுக்கு ஆச்சரியத்தோடு லேசான சிரிப்பும் இதழில் எட்டிப் பார்த்தது. "ஓகே வெயிட்! நா.. நான் டிலீட் பண்றேன்" என்று உடனே அந்த புகைப்படத்தை அழித்தவன், "டிலீட் பண்ணிட்டேன், யூ ரிலாக்ஸ்!" என்றுவிட்டு நகரப் போக, பெண்ணவளோ அவனை நம்பாத பார்வைப் பார்த்தாள். "ஊஃப்ப்..." என்று பெருமூச்சை இழுத்துவிட்டு, "உனக்கு சந்தேகம்னா நீயே செக் பண்ணிக்கோ!" என்று அவனிடம் அலைப்பேசியை நீட்ட, அதை வாங்கிக்கொண்ட ஜான்சியோ எதற்காக எடுத்தோம் என்பதையே மறந்து அந்த புதுமாடல் ஐஃபோனை திருப்பித் திருப்பி வருடிப் பார்த்தாள். "ரொம்ப அழகா இருக்கு" என்று விழிகள் மின்ன சொல்லிக்கொண்டே அவள் ஆச்சரியத்தோடு காதில் வைப்பதும் எடு...

யாத்ரன் 03

Image
யாவும் நின் யாத்ரனாய் Episode 03 அந்த வெள்ளை நிற கேப் ஊர் எல்லையைத் தாண்டி உள்ளே நுழைய, கார் ஜன்னல் வழியே வெளியே வெறித்திருந்த யாத்ரனுக்கு மனம் என்றும் இல்லாத ஒரு படபடப்போடு இருந்தது. "இதுதான் நான் பொறந்து வளர்ந்த ஊரு யாத்ரா" என்ற வரதன், "டேய் ஒன்னு மட்டும் சொல்லிக்குறேன், இந்த இடமோ இந்த ஆளுங்களோ எல்லாமே உனக்கு புதுசு. அதனால டுபாய்க்கு திரும்ப போற வரைக்கும் இதோ இதை கொஞ்சம் மூடிட்டு இரு! அது போதும்..." என்று கெஞ்சாத குறையாக வாயைக் காட்ட, அலட்சியமாக தோளைக் குலுக்கினான் மற்றவன். நிஜமாகவே இந்த கிராமத்து வாசனையும் இந்த சூழலும் அவன் பார்த்திராத ஒன்று. ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போல் அவன் விழிகள் மின்ன ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்க, சரியாக அவனுடைய அலைப்பேசி அலறியது. திரையில் தெரிந்த தன் தாயின் எண்ணை புருவ முடிச்சுகளோடு பார்த்தவன், அலைப்பேசியை அணைத்துவிட்டு மீண்டும் வெளியே வெறிக்கத் தொடங்க, சுற்றியிருந்த ஊர் மக்களோ ஊருக்குள் புதிதாக நுழையும் வாகனத்தை ஆர்வத்தோடு பார்த்திருந்தனர். "யாரா இருக்கும்?"  "யாரோட கார் அது..?" என்ற கேள்விகள் சுற்றி எழ, சரியாக அந்...