Posts

விழிகள் 23

Image
இத்தனை நேரம் வீரா பேசியதை நினைத்து உறக்கமின்றி அழுது கரைந்த இந்திரா அப்போதுதான் மெல்ல விழிகளை மூடி ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல, திடீரென அவளுடைய அறைக்குள் நுழைந்தது அந்த உருவம். அவளுடைய அறையில் தடுமாறிய அந்த நிழலுருவம் இப்போது உறங்கிக்கொண்டிருந்த இந்திராவை மெல்ல நெருங்க, உள்ளுக்குள் மனம் எச்சரிக்க பட்டென்று விழிகளைத் திறந்தவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. "ஆஆ..." என்று அதிர்ச்சியில் கத்தப் போனவளின் வாயை உடனே பொத்திக்கொண்ட வீரா, "எதுக்கு இப்போ கத்துற, அதான் நான்தான்னு தெரியுதுல்ல. அப்பறமென்ன?" என்று பதற்றமாகக் கேட்க, அவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தாள் இந்திரா. தன் வாயை பொத்தியிருந்த அவனின் கரத்தை உதறிவிட்டவள், "என்ன விளையாட்டு இது வீரா, காவலர்கள் யாராவது பார்த்தால் அவ்வளவுதான். முதலில் இங்கிருந்து செல், இல்லையென்றால்..." என்று பொரிந்துக்கொண்டே போக, "அரசருக்கே நம்ம விஷயம் தெரிஞ்சிருச்சு. இதுக்கப்பறம் எதுக்கு நான் ஓடி ஒளியணும்? பார்த்துக்கலாம்" என்றவன் சோம்பல் முறித்தவாறு அவளுடைய கட்டிலில் படுத்துக்கொண்டான். அவனை முறைத்துப் பார்த்தவள், "எதுவ...

விழிகள் 22

Image
அதேநேரம் இங்கிலாந்தில், ஜன்னல் வழியே மைதானத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த அதிகாரிகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் லியோ. "லியோ.. உன்ன எவ்வளவு நேரம் கூப்பிடுறது, அங்கயிருந்து வந்ததுலயிருந்து ஒரு  மாதிரியாவேதான் இருக்க. சரி அதை விடு, இந்த ஃபைல நீ செக் பண்ணிட்டேன்னா ஆஃபீஸ்க்கு சப்மிட் பண்ணிடலாம்" என்று அரசாங்கத்தில் பணி புரியும் அவனின் தோழன் ஜஸ்டின் சொல்ல, "செக் பண்ணிட்டேன்" என்றுவிட்டு சலிப்பாக விழிகளை உருட்டினான் மற்றவன். ஜஸ்டினுக்கு சிறு சந்தேகம் எழ, வேகமாக அதையெடுத்துப் பார்த்தவன், "செக் பண்ணிட்டேன்னு சொன்ன, இதுல நிறைய எரர்ஸ் இருக்கு லியோ. இப்படி மட்டும் சப்மிட் பண்ணியிருந்தா ப்ரெசிடென்ட் நம்மள இங்கயிருந்து துரத்தியே விட்டிருப்பாரு" என்றான் அதிர்ச்சியோடு. ஆனால் லியோவின் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் வெளிப்படவில்லை.  "ஓ.." என்று மட்டும் சொன்னதோடு அவன் பாட்டிற்கு இருக்கையில் அமர்ந்து விழிகளை மூடி தலையை பின்னே சாய்த்துக்கொள்ள, மற்றவனுக்கு எல்லாமே புதிதாகத்தான் தெரிந்தது. "ஆர் யூ ஓகே லியோ, உன்கிட்ட எனக்கு ஏதோ வித்தியாசம் தெரியுது....

விழிகள் 21

Image
அடுத்தநாள் மனம் முழுக்க பாரத்தோடு லியோ தன் நாட்டிற்கு திரும்பியிருக்க, அவனின் நினைவுகளால் வாடிப் போனாள் யாழ்மொழி என்றுதான் சொல்ல வேண்டும். 'நிச்சயமாக அவர் என்னைத் தேடி வருவார், ஒருவேளை வராமல் போனால்... அவருடைய நினைவுகளே போதும் நான் வாழ' என்று மட்டும் தனக்குள் நினைத்துக்கொண்டவள் அவனுடைய நினைவுகளோடு நேரத்தைக் கடத்த, அதேநேரம் தன் அறை ஜன்னல் வழியே தோட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் இந்திரா. "வீராவை நான் திருமணம் செய்தால் தந்தை ஆட்சியையே விட்டு விடுவதாக சொல்கிறார் என்றால், ஒரு போதும் தன்மானத்தை இழக்க மாட்டேன் என்று விதாண்டாவாதம் செய்கிறான் அவன். நானும் என்னதான் செய்வது, இருவருக்குமிடையில் சிக்கித் தவிப்பது என்னவோ நான்தான்'  என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தவள் சட்டென அறைக் கதவு தட்டப்படும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள். வேகமாக சென்று அவள் கதவைத் திறக்க, உள்ளே வந்த அரசர் வேந்தனோ அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக்கொள்ள, அவருக்கு பக்கத்தில் தரையில் அமர்ந்துக்கொண்ட இந்திரா தந்தையின் மடியில் தலையை சாய்த்துக்கொண்டாள். "நான் சொன்னதைப் பற்றி சிந்தித்தாயா இந்திர...

விழிகள் 20

Image
லியோவோ படபடவென பேசிக்கொண்டே  சென்றவன் அடுத்து யாழ்மொழி பார்த்த பார்வையில் மனம் பிசைய அதற்குமேல் அவளின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டான். ஜேம்ஸ்ஸிற்கு அவர்கள் பேசிக்கொள்வது புரியாவிட்டாலும் இருவருக்குமிடையில் ஏதோ பிரச்சனை என்று மட்டும் அவனால் நன்றாகவே உணர முடிந்தது. யாழ்மொழியொ விழிநீரை துடைத்தெறிந்து விட்டு அவனை அழுத்தமாகப் பார்த்தவள், "காதல் இல்லாமல்தான் என்னுடன் பழகினீர்களா, காதல் இல்லாமல்தான் எனக்கு அன்று முத்தம் கொடுத்தீர்களா? ஏன் அந்த ஆங்கிலேய அரண்மனையிலிருந்து என்னை காப்பாற்றியது கூட காதலே இல்லாமல்தானா?" என்று தன் கேள்விக் கனைகளைத் தொடுக்க, அவனோ பதிலுக்கு அலட்சியமாக தோளைக் குலுக்கினான். "உன் கூட பழகின ஒரே காரணத்துக்காகதான் நான் உன்னை காப்பாத்தினேன், என்ட் முத்தம் கொடுத்துக்குறது நான் வளர்ந்த சூழல்ல சகஜமான ஒன்னு. அதை நீ காதல்னு எடுத்துப்பேன்னு எனக்கு தெரியல. என்னோட பதவி அதிகாரம் என்னன்னு உனக்கு நல்லாவே தெரியும், அப்படிப்பட்ட பதவில இருக்குற நான் உன்னை மாதிரி ஒரு பணிப்பெண்ண காதலிப்பேன்னு நீ எப்படி நினைக்கலாம்"  என்று அவன் பேசிய வார்த்தைகள் ...

விழிகள் 19

Image
  அந்த பக்க குளத்தில் நீராடிக்கொண்டிருந்த ஜோடி அன்னங்களை விழிகளில் கண்ணீரோடும் இதழில் புன்னகையோடும் பார்த்த யாழ்மொழியை புரியாமல் பார்த்தான் லியோ. "என்ன பார்க்குற?" என்ற அவனின் குரலில் இமை சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டவள், "அந்த ஜோடி அன்னங்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. அவைகளுடைய காதலுக்கு எந்த தடையும் இல்லை. அந்த சுதந்திரம் கூட எனக்கு இல்லையே என்ற ஏக்கம்தான்" என்று பேசிக்கொண்டே சென்ற யாழ்மொழியின் வார்த்தைகளில் அத்தனை வலி. ஒட்டி உரசி நீராடிக்கொண்டிருந்த ஜோடி அன்னங்களை ஒரு பார்வைப் பார்த்தவன், தன்னவளின் புறம் திரும்பி அவளையே விழி மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.  யாழ்மொழியும் மெல்ல நிமிர்ந்துப் பார்த்தவள் அவனின் பார்வையில் முகம் சிவந்தவளாக மீண்டும் தலையை குனிந்துக்கொள்ள, "நீ சொல்றது சரிதான், ஆனா ஒரு சந்தேகம். அதுங்க காதல் ஜோடிங்கன்னு நீ எப்படி சொல்ற. ஒருவேள ரெண்டும் பொண்ணுங்களாவோ பசங்களாவோ கூட இருக்கலாமே!" என்று தன் பெரிய சந்தேகத்தைக் கேட்டு வைத்தான். அந்த கேள்வியில் அவனை முறைத்துப் பார்த்தவள், "இயற்கையை ரசிக்கக் கூட தெரியாத தாங்கள் எல...

விழிகள் 18

Image
தூக்கத்திலிருந்து அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்து தன் முன்னே இருந்தவளை யாழ்மொழி பதற்றமாகப் பார்க்க, தோழியை தாவி அணைத்துக்கொண்டாள் இந்திரா. "யாழ், என.. எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. இது கனவா நினைவா என்று கூட தெரியவில்லை" என்று அவள் படபடவென பேசிக்கொண்டே போக, ஏற்கனவே தூக்கக் கலக்கத்தில் இருந்தவளுக்கு அவள் பேசுவதை கிரகிக்கவே சற்று நேரம் எடுத்தது. "இளவரசி, என்ன கூறுகிறீர்கள்? எனக்கு எதுவுமே புரியவில்லை" என்று விழிகளை கசக்கியவாறு யாழ் கேட்க, "வீராவை ஆங்கிலேயர்கள் விடுதலை செய்து விட்டார்களாம், அரண்மனை காவலாளிகள் பேசிக்கொள்வதைக் கேட்டேன். இதுவரை கைது செய்த எவரையும் விட்டதில்லை, முதல் தடவையாக வீராவை விட்டிருக்கிறார்கள் என்றால் எல்லாம் அந்த கடவுளுக்குதான் நன்றி கூற வேண்டும்" என்ற இந்திராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. அவளுடைய சந்தோஷம் விழிகளிலுள்ள கண்ணீரிலும் இதழில் குடிகொண்டுள்ள புன்னகையிலும் அப்பட்டமாகத் தெரிய, மற்றவளுக்கு உச்சகட்ட ஆச்சரியம். "என்ன.. நிஜமாகவா? என்னால் நம்பவே முடியவில்லை இளவரசி" என்ற யாழ்மொழியின் குரல் குறையாத அதிர்ச்சியோடு வெளிப்பட...