Posts

விழிகள் Final Episode

Image
கப்பலில் யாருடைய கண்ணிலும் படாமல் யாழ்மொழி மறைந்து செல்ல முயற்சிக்க, ஆனால் விதி  அவளை விட்டால்தானே! "அம்மாடி, உனக்கு தேவையான சாப்பாட்ட நான் கொண்டு வந்து தரேன்.. ராத்திரி ஆனதும் இந்த கப்பல்ல ஒரு சின்ன அறை இருக்கு தேவையில்லாத பொருட்கள வச்சிருப்பாங்க. நாம தேசத்துக்கு போய் சேருர வரைக்கும் நீ அங்கேயே தங்கிக்கலாம். புரியுதா.."  என்று கணபதி சொல்ல, தலையாட்டி வைத்தவளுக்கு வயிற்றில் பயபந்து உருளத்தான் செய்தது. கிட்டத்தட்ட மூன்று நாட்கள் யார் கண்ணிலும் சிக்காமல் கப்பலுக்குள் மறைந்திருந்தவளால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  "இன்னும் எத்தனை நாட்களுக்கு என்னால் இப்படி மறைந்திருக்க முடியும்? இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவைதானா! தங்களை எப்போது சந்திப்பேன் அதிகாரி, நீங்கள் என்னுடன் இல்லாத ஒவ்வொரு நொடியும் நரகம் போல் இருக்கிறதே.."  என்று தனக்குள் பேசி அழுது கரைந்துக்கொண்டு பொருட்கள் அடங்கிய அந்த சிறிய அறைக்குள் அவள் அமர்ந்திருக்க, "ஹேய் யார் நீ?" என்று அதட்டலாக கேட்டது ஒரு குரல். யாழ்மொழி உடல் அதிர தூக்கி வாரிப்போட்டவளாக திரும்பிப் பார்க்க, அங்கு அவளை அதிர்ச்சி க...

விழிகள் 30

Image
யாழ்மொழியோ பிடிவாதமாக நிற்க, இடுப்பில் கைக்குற்றி அவளை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் வீரா. அவனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறந்துக்கொண்டிருந்தது. "இங்க பாரு யாழ், உன்னை எப்டியாச்சும் காப்பாத்துவேன்னு நான் வாக்கு கொடுத்திருக்கேன். ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது, அவங்க உன்ன கண்டுபிடிச்சிருவாங்க. என்னை நம்பு! நம்ம திட்டப்படிதான் எல்லாமே நடக்கும். அவர் கண்டிப்பா வருவாரு"   என்று அவன் சொல்லி புரிய வைக்க முயல, அப்போதும் அவளுடைய முகம் தெளிவடையவில்லை. விழிகளை அழுந்த மூடித் திறந்து, "யாழ், அவர் சொன்ன வார்த்தைய நீ மீற போறியா. அவர நீ பார்க்கணும்னா அதுக்கு நீ உயிரோட இருக்கணும். எல்லா அதிகாரிகளும் உன்ன தேடிட்டு இருக்காங்க. அவங்க கையில நீ சிக்க கூடாது. நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்கோ" என்று அழுத்தமான குரலில் சொல்ல, சில கணங்கள் தீவிரமாக யோசித்துவிட்டு மெல்ல தலையாட்டி வைத்தாள் யாழ்மொழி. உடனே வீரா அவளை யார் கண்ணிலும் சிக்காமல் துறைமுகத்தை நோக்கி அழைத்துச் செல்ல, சுயநினைவு இல்லாமல் கிடப்பவனை பாவமாகப் பார்த்திருந்தான் ஜேம்ஸ். அப்போதுதான் லியோ இறுதியாக சொன்ன வார்த்தைகள...

விழிகள் 29

Image
துப்பாக்கி முனையில் இருந்தும் லியோவின் விழிகளில் கொஞ்சமும் பயத்திற்கான சாயல் இல்லை. "அவ எங்க?" என்று ரொனெல்ட் கேட்க, நக்கலாக சிரித்தானே தவிர பதிலே சொல்லவில்லை அவன். அதில் கோபத்தின் உச்சகட்டத்திற்கே சென்றவர் துப்பாக்கியின் பின்புறத்தால் அவன் தலையில் ஓங்கி அடித்து, "இந்த இடம் முழுக்க தேடுங்க, அந்த பொண்ணு எனக்கு வேணும்" என்று அடித்தொண்டையிலிருந்து உறும, அடுத்தகணம் பல அதிகாரிகள் அவளை தேடி அலைந்தனர். ஒவ்வொரு குடிசைகளாக நுழைந்து யாழ்மொழியைத் தேட, அவள் இருந்தால்தானே! ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் ரொனேல்டின் முன்னே வந்து நின்றவர்கள், "அந்த பொண்ணு எங்கேயும் இல்லை சார், நாங்க எல்லா இடமும் தேடி பார்த்துட்டோம்" என்று மூச்சு வாங்கியவாறு சொல்ல, அவருக்கோ மொத்த கோபமும் லியோவின் மீதுதான் தாவியது. "ஹவ் டேர் யூ..." என்று கோபத்தில் கத்தியவாறு மீண்டும் அவனை அடித்தவர், "இவன நம்ம ப்ரிசன்ல அடைச்சு வைங்க, இவன் வாயாலயே உண்மைய சொல்ல வைக்கிறேன்" என்று தனக்குள்ளேயே ஒரு திட்டத்தை தீட்டிக்கொண்டு வண்டியில் ஏறிக்கொண்டார். அடுத்த ஒருமணி நேரத்தில் அடிமைகளை அடைத்து வைக்க...

விழிகள் 28

Image
"ஏய் பாலா.. காலையிலயிருந்து பார்க்குறேன். நீயும் வீராவும் பரபரப்பா இருக்கீங்க. என்ன விஷயம்?" என்று அந்த ஊரிலுள்ள பெரியவரான பாண்டியன் கேட்க, அவர் பக்கத்திலுள்ள நான்கு அள்ள கைகளும் பாலாவை கேள்வியாக பார்த்துக்கொண்டிருந்தனர். "அதுவா... அந்த வெள்ளைக்கார துரையும் நம்ம யாழ்மொழியும் காதலிக்கிறாங்கல்ல! அவங்களுக்கு இன்னைக்கு கல்யாணம். அதான்.. இன்னும் நிறைய வேலை கெடக்கு. நாமதானே எல்லாத்தையும் பார்த்து பண்ணணும்" என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் பாலா. போகும் அவனை உறுத்து விழித்த பாண்டியனுக்கு இதை கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. "என்ன கருமம் இது! நம்ம நாட்ட நாசமாக்கின அந்த வெள்ளைக்காரனுக்கு இவனுங்க உதவி பண்றானுங்களா, என்னால இதை ஜீரணிக்கவே முடியல" என்று அவர் கத்த, "ஆமா அண்ணே, அவங்களால அதிகமா வரிய கட்டி நாம இப்படி ஒரு நிலைமையில இருக்கோம். நம்மள அடிமைப்படுத்தி வற்புறுத்தி நம்ம உழைப்ப திருடினாங்க. ஆனா நடந்தது எல்லாத்தையும் மறந்து அவனுங்களோடயே உறவு கொண்டாடுறானுங்க" என்றார் பாண்டியனுக்கு பக்கத்திலிருந்த ராசு. "அந்த வெள்ளைக்காரன நம்ம ஊர் புள்ள கா...

விழிகள் 27

Image
  வில்லியம் லியோவை நோக்கி குறி வைத்து சுடப் போக, பற்களைக் கடித்தவன் தன் எதிராளி எதிர்பார்க்காத கணத்தில் மின்னல் வேகத்தில் செயற்பட்டு துப்பாக்கியை அவன் கரத்திலிருந்து தட்டிவிட்டான். வில்லியமோ அதிர்ந்துப் போய் அதை எடுக்கப் போக, உடனே சுதாகரித்து கையிலெடுத்த லியோ அவனின் நெற்றிப் பொட்டை நோக்கி குறி வைத்திருக்க, அந்த நொடியே சடலமாக தரையில் விழுந்தான்  வில்லியம். இறந்துக் கிடந்தவனின் உடலை லியோ  வெறித்துப் பார்த்திருக்க, மற்ற இருவருக்கும் ஒருசில கணங்களில் நடந்ததை நம்பவே முடியவில்லை. ரொனேல்டிற்கு இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.  "இதோட விளைவு என்னன்னு தெரிஞ்சும் எங்களுக்கு எதிரா இப்படி பண்ணியிருக்க. இதுக்கப்பறம் நீயே கெஞ்சினாலும் ப்ரிட்டிஷ் அரசாங்கத்துல உனக்கு இடம் இல்ல. அதுமட்டுமில்ல, ஒரு ப்ரிட்டிஷ் ஆஃபீசர கொன்னதுக்காக உன்ன கொல்ல சொல்லி ஆர்டர் போட போறேன். அப்போதான்டா நான் யாருன்னு.."  என்று பேசிக்கொண்டே சென்றவரின் வார்த்தைகள் லியோ அவரை நோக்கி துப்பாக்கியை குறி வைக்கவும் அடங்கிப் போக, எச்சிலை விழுங்கியபடி இரண்டடி பின்னே நகர்ந்தார். "நோ  லியோ... நீ இப்படி பண்ண கூடாத...