விழிகள் Final Episode
கப்பலில் யாருடைய கண்ணிலும் படாமல் யாழ்மொழி மறைந்து செல்ல முயற்சிக்க, ஆனால் விதி அவளை விட்டால்தானே! "அம்மாடி, உனக்கு தேவையான சாப்பாட்ட நான் கொண்டு வந்து தரேன்.. ராத்திரி ஆனதும் இந்த கப்பல்ல ஒரு சின்ன அறை இருக்கு தேவையில்லாத பொருட்கள வச்சிருப்பாங்க. நாம தேசத்துக்கு போய் சேருர வரைக்கும் நீ அங்கேயே தங்கிக்கலாம். புரியுதா.." என்று கணபதி சொல்ல, தலையாட்டி வைத்தவளுக்கு வயிற்றில் பயபந்து உருளத்தான் செய்தது. கிட்டத்தட்ட மூன்று நாட்கள் யார் கண்ணிலும் சிக்காமல் கப்பலுக்குள் மறைந்திருந்தவளால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. "இன்னும் எத்தனை நாட்களுக்கு என்னால் இப்படி மறைந்திருக்க முடியும்? இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவைதானா! தங்களை எப்போது சந்திப்பேன் அதிகாரி, நீங்கள் என்னுடன் இல்லாத ஒவ்வொரு நொடியும் நரகம் போல் இருக்கிறதே.." என்று தனக்குள் பேசி அழுது கரைந்துக்கொண்டு பொருட்கள் அடங்கிய அந்த சிறிய அறைக்குள் அவள் அமர்ந்திருக்க, "ஹேய் யார் நீ?" என்று அதட்டலாக கேட்டது ஒரு குரல். யாழ்மொழி உடல் அதிர தூக்கி வாரிப்போட்டவளாக திரும்பிப் பார்க்க, அங்கு அவளை அதிர்ச்சி க...