விழிகள் 23
இத்தனை நேரம் வீரா பேசியதை நினைத்து உறக்கமின்றி அழுது கரைந்த இந்திரா அப்போதுதான் மெல்ல விழிகளை மூடி ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல, திடீரென அவளுடைய அறைக்குள் நுழைந்தது அந்த உருவம். அவளுடைய அறையில் தடுமாறிய அந்த நிழலுருவம் இப்போது உறங்கிக்கொண்டிருந்த இந்திராவை மெல்ல நெருங்க, உள்ளுக்குள் மனம் எச்சரிக்க பட்டென்று விழிகளைத் திறந்தவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. "ஆஆ..." என்று அதிர்ச்சியில் கத்தப் போனவளின் வாயை உடனே பொத்திக்கொண்ட வீரா, "எதுக்கு இப்போ கத்துற, அதான் நான்தான்னு தெரியுதுல்ல. அப்பறமென்ன?" என்று பதற்றமாகக் கேட்க, அவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தாள் இந்திரா. தன் வாயை பொத்தியிருந்த அவனின் கரத்தை உதறிவிட்டவள், "என்ன விளையாட்டு இது வீரா, காவலர்கள் யாராவது பார்த்தால் அவ்வளவுதான். முதலில் இங்கிருந்து செல், இல்லையென்றால்..." என்று பொரிந்துக்கொண்டே போக, "அரசருக்கே நம்ம விஷயம் தெரிஞ்சிருச்சு. இதுக்கப்பறம் எதுக்கு நான் ஓடி ஒளியணும்? பார்த்துக்கலாம்" என்றவன் சோம்பல் முறித்தவாறு அவளுடைய கட்டிலில் படுத்துக்கொண்டான். அவனை முறைத்துப் பார்த்தவள், "எதுவ...