Posts

கனவுகள் 18

Image
"இன்னும் ஒரு நாலு நாள்ல தேர்தல், ஆனா நீ எல்லாத்தையும் உதறி தள்ளிட்டு இங்கயிருந்து போறேன்னு சொல்லுற... என்ன விளையாடுறியா தஷ்வந்த்?" என்று ரகுவீர் நடு ஹாலில் கத்த, தஷ்வந்தோ இறுகிய முகமாக தரையை வெறித்தவாறு நின்றிருந்தான். ஆதிரனோ அங்கிருந்த சோஃபாவில் அலைப்பேசியை நோண்டியவாறு அமர்ந்திருக்க, மாடியிலிருந்து நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கௌரி "பதில் சொல்லு தஷ்வந்த்" என்று பெரியவர் கத்தியதும், "எனக்கு இங்க இருக்க பிடிக்கலப்பா, லண்டன்லயே செட்ல் ஆகலாம்னு யோசிக்கிறேன். என்னை மன்னிச்சிருங்க" என்று நிமிர்ந்தும் பார்க்காமல் பதில் சொன்னான் அவன். ரகுவீரோ உச்சகட்ட கோபத்தோடு தன் மகனை எரிப்பது போல் பார்த்தவர், "அப்போ நம்ம வீட்டுல இருக்கே அந்த பொண்ணு?" என்று கேட்க, எச்சிலை விழுங்கிக்கொண்டவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. "அது.. அது வந்து... அண்ணாதானே  கூட்டிட்டு வந்தான், நான் ஒன்னும் அழைச்சுட்டு வரல்லையே!" என்ற அலட்சியமான அவனின் பதிலில், கிட்டத்தட்ட ரகுவீர் அடிப்பது போல் தன் கரத்தை ஓங்க, அப்போதும் மரம் போல் நின்றுக்கொண்டிருந்தான் தஷ்வந்த். ...

கனவுகள் 17

Image
ஆதிரனோ அவளிதழை சுவைத்துக்கொண்டே போக, திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாக அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட்டு அவனிடமிருந்து பதறியபடி விலகினாள் யாழினி. "என்னடீ?" என்று அவன் மாய வலை அறுக்கப்பட்ட எரிச்சலில் கேட்க, "இப்போவும் இது காதல் இல்லல்ல தேஷ்வா?" என்று விழிகளில் கண்ணீரோடுக் கேட்டாள் அவள். "வாட்! இதை நீ விடவே மாட்டியா யாழ்? இந்த மாதிரி இருக்குறது இரண்டு பேருக்குமே பிடிச்சிருக்கு. அப்போ எதுக்கு இந்த காதல் மண்ணாங்கட்டி எல்லாம்? எனக்கு இதுல சுத்தமா இன்ட்ரெஸ்ட் இல்லன்னு முன்னாடியே சொல்லிட்டேன், ஆனா நீ திரும்ப திரும்ப... ச்சே!" என்று அவன் கடுப்பாகச் சொல்ல, யாழினிக்கோ முகமே கறுத்துவிட்டது. மீண்டும் மீண்டும் அவனிடம் தன் கட்டுப்பாட்டை இழந்து அவமானப்படுவதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. "காதல் இல்லாத காமம் எனக்கு தேவையில்ல. நான் ஒன்னும் விபச்சாரி கிடையாது. உங்க ஆசைய எல்லாம் தேவைப்படுறப்போ தீர்த்துக்க..." என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் முழங்கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், "ஷட் அப் யூ ப்ளடி ****... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினேன்னா நானே உன்...

கனவுகள் 16

Image
தஷ்வந்த் கேட்ட கேள்வியில் ஒருகணம் அதிர்ந்துப் போய் நின்றான் ஆதிரன்.  "கம் அகைன்..." என்று ஒரு அடி முன்னே வைத்து ஆதிரன் கேட்க, அவனின் பார்வையில் சற்று ஜெர்க்காகினாலும், "அது.. அது என்னை மட்டும் குத்தம் சொல்ற. இவ அப்பனோட ரகசியத்தை கண்டுபிடிக்க நீ யாழினிய யூஸ் பண்ணல, அவள நீ ஏமாத்தல? உன் மேல தப்ப வச்சுக்கிட்டா என்னை திருத்த வர்ற?" என்று அவனை நேருக்கு நேராகப் பார்க்க பயந்து எங்கோ பார்த்தபடி கேட்டான் மற்றவன். "தஷ்வந்த், நான் அவள காதலிக்கல" என்று இவன் அழுத்தமாக சொல்ல, "காதலிக்கல சரி.. யாழினி கூட நெருங்கி பழகாமலா இருந்த. அப்போ இது ஏமாத்துறது கிடையாதா?" என்று கேட்ட தஷ்வந்த், "நான் இந்த முடிவு எப்போவோ எடுத்தது. கௌரி விஷயத்துல நான் கட்டுப்பாட்டை இழந்துட்டேன். அதான் என்னோட தப்பு. ச்சே! அவ கர்ப்பமா இருக்குறான்னு தெரிஞ்ச அடுத்த செக்கன் அவள விட்டுட்டு போகணும்னு கூட நினைக்கல, கூடவே அந்த குழந்தைய ஏத்துக்கவும் முடியல. அபார்ட் பண்ணுன்னு பல தடவை சொன்னேன், அவ கேக்கல. அப்போ நான் என்ன பண்ண முடியும்? இதையெல்லாம் சாக்கா வச்சு என்னை கன்ட்ரோல் பண்ணாதீங்க. அப்பாகிட்ட ச...

கனவுகள் 15

Image
ஆதிரனை கொஞ்சமும் எதிர்பார்க்காதவளாய் யாழினி அதிர்ந்துப் போய் நிற்க, ஆதிரனோ தன் கழுகுப் பார்வைக் கொண்டு அவளையேதான் ஆழ்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தான். "அது... அது வந்து... நா.. நீங்க... அது..." என்று யாழினி தடுமாற, "என்ன இப்போதான் பேச கத்துக்குறியா?" என்று ஒற்றைப் புருவத்தைத் தூக்கி மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறுக் கேட்டான் அவன். "அது... உங்கள பத்திதான் தேஷ்வா. உங்கள மாதிரி பெரிய ஆளு கூட என்னை மாதிரி ஒரு வேலைக்காரிய சேர்த்து வச்சு பேசியிருக்காங்களே! அந்த மன ஆதங்கத்தை தான் என் பழைய கிட்சன் மேட்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்" என்று வராத கண்ணீரை அவள் துடைத்துக்கொள்ள, "இப்படியெல்லாம் நீ எங்கதான் பேச கத்துக்குறியோ?" என்று நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்ட ஆதிரன், "முக்கியமான அகௌன்ட்ஸ் செக் பண்ணணும், நீயும் போய் ஹெல்ப் பண்ணி வேலைய கொஞ்சம் கத்துக்கோ!" என்றுவிட்டு அங்கிருந்து நகரப் போனான். ஆனால், "தேஷ்வா..." என்ற அழைப்பு அவனை நிறுத்த, யாழினியை திரும்பி கேள்வியாகப் பார்த்தான் ஆதிரன். "இல்லை.. நீங்க தப்பா எடுக்கலன்னா என்னை ...

கனவுகள் 14

Image
ஆதிரன் எதுவும் பேசாமல் அவளை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள, யாழினியோ அவனையேதான் சுவற்றில் சாய்ந்த வண்ணம் பார்த்துக்கொண்டிருந்தாள். "இந்த துரோகத்தை உங்களால தாங்கிக்க முடியலையா தேஷ்வா? இதே வலிய தானே நீங்க எனக்கு கொடுத்தீங்க. என்னோடது காதலுக்கு துரோகம்னா  உங்களோடது நட்புக்கு துரோகம். ஆனா வலி என்னவோ ஒன்னுதான்" என்று மீண்டும் அவள் வலி நிறைந்த குரலில் சொல்ல, "இப்போ என்னடீ, நான் உன்னை ஏமாத்திட்டேன். அதைதானே சொல்லி காமிச்சிக்கிட்டே இருக்க. பேச வேண்டியதெல்லாம் பேசிட்டு மொதல்ல இங்கயிருந்து கெளம்பு, இன்னும் கொஞ்ச நேரம் என் கண்ணு முன்னாடி நீ இருந்தாலும் அவ்வளவுதான்" என்று உச்சகட்ட கோபத்தில் கத்தினான் ஆதிரன். யாழினியின் இதழ்களோ விரக்தியில் புன்னகைத்தன. "அதெப்படி! உங்களுக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா? உங்க கோபத்தை அவன அடிச்சு தீர்த்துக்கிட்டீங்க, என் மனசுல இருக்குற ஆதங்கத்தை நான் எப்படி தீர்த்துப்பேன்? ச்சே!" என்று அவள் எரிச்சலாக சொல்ல, இடுப்பில் கைக்குற்றி அவளை கூர்மையாகப் பார்த்தவன் அவளருகே மீண்டும் நெருங்க, யாழினியும...

கனவுகள் 13

Image
கார் கண்ணாடி வழியே வெளியே வெறித்துக்கொண்டிருந்த ஆதிரனின் மனதிற்குள் ஏகப்பட்ட குழப்பம் சூழ்ந்திருந்தது.  'ஏதோ ஒரு ஆடு நமக்குள்ள இருக்கு. அது நிஜமாவே தஷ்வந்த் தானா இல்லை...' என்று இவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே வாகனங்களின் நெரிசலில் கார் சட்டென நிற்க, ஓட்டுனரைப் பார்த்து விட்டு ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தான் அவன். சற்று முன்னே ஆட்கள் சூழ்ந்திருக்க, "என்னாச்சுன்னு தெரியலயே தம்பி, ஏதோ ஆக்சிடன்ட் போல!" என்று ஓட்டுனர் சொல்ல, புருவங்களை சுருக்கி யோசித்தவனுக்கு ஏற்கனவே தாமதமாகியிருக்க, அத்தனை எரிச்சலாக இருந்தது.  கார் சீட்டை கை முஷ்டியை இறுக்கி கோபத்தில் ஓங்கிக் குத்தியவன், சட்டென என்ன நினைத்தானோ! "இடியட்ஸ்!" என்று கத்தியவாறு காரிலிருந்து இறங்கி கூட்டத்துக்கு நடுவே சென்றுப் பார்த்தான். அடுத்தகணம் அவனுடைய விழிகள் விரிய, "கௌரி..." என்று முணுமுணுத்தது அவனுடைய இதழ்கள். அங்கு அவனெதிரே தரையில் சுயநினைவில்லாது கிடந்திருந்தாள் கௌரி. அடுத்த சில மணித்தியாலங்களில், அப்போதுதான் தயாராகி கையில் சில ஃபைல்களை எடுத்துக்கொண்டு வேகவேகமாக மாடியிலிருந்து இறங்கிய தஷ...