அதிரூபன் 11
"யாரைக் கேட்டு மாம், இப்படி ஒன்னு ப்ளான் பண்ணீங்க? நான் கீர்த்திய லவ் பண்றேன் அவள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு எப்போவாவது சொன்னேனா? சொல்லுங்க..." என்று ஹரி அடக்கப்பட்ட கோபத்தோடு சுவற்றுக்கு பின்னால் மறைந்திருந்தவாறு தன் அம்மாவிடம் கத்த, "நான் யாரைக் கேட்டு முடிவு பண்ணணும்? உன் விஷயத்துல எல்லா முடிவையும் எடுக்க எனக்கு உரிமை இருக்கு" என்று அழுத்தமாக சொன்னார் ராதிகா. "திஸ் இஸ் டூ மச் மாம், இது என்னோட லைஃப். நான் கல்யாணம் பண்ண போற பொண்ணு எனக்கு பிடிச்சிருக்கணும்ல!" என்று அவன் இயலாமையோடுக் கேட்க, சலிப்பாக விழிகளை உருட்டினார் அவர். "கீர்த்திக்கு என்னடா குறை, அழகு படிப்பு பணம் எல்லாமே இருக்கு. அப்படி இருக்குறப்போ எதுக்குடா அவள வேணாம்னு சொல்லுற. கீர்த்திய விட உனக்கு பொருத்தமானவ யாருமே இல்லன்னுதான் எனக்கு தோனுது" என்று ராதிகா உறுதியாகச் சொல்ல, இவனுக்கு எப்படி தன் அம்மாவை சமாளிப்பது என்றே தெரியவில்லை. "எல்லாமே இருக்கட்டும், ஆனா லவ்னு ஒன்னு இருக்கு. அவ மேல எனக்கு அது வரவே மாட்டேங்குது. நீங்க என் லைஃப்ல விளையாடுறீங்க மாம்" என்று அவன் கோபமாகப