மையவிழி பார்வை 20




"தியா, வைஷுவோட ஃபோன கொடுங்க. மேபீ அதுல நமக்கு ஏதாச்சும் க்ளூ கிடைக்கலாம்" என்று ப்ரணவ் சொன்னதும், உடனே வைஷ்ணவியின் அலைப்பேசியைக் கொடுத்தாள் ஆராதியா.


"பாஸ்வர்ட்" என்று அவன் கேட்க, அவளோ புருவ முடிச்சுகளோடு யோசிக்க ஆரம்பித்தாள்.


"என.. எனக்கு தெரியல ப்ரணவ்" என்று அவள் பதற்றமாகச் சொல்ல, "பாஸ்வர்ட்தானே என்கிட்ட கொடுங்க" என்று ப்ரணவின் கையிலிருந்து அலைப்பேசியை பிடுங்கிய ஹர்ஷா, "வைஷ்ணவியோட டேட் ஆஃப் பர்த் என்ன ஆரு?" என்று கேட்டு அதை கொடுத்துப் பார்த்தான்.


அதில் அது பிழையென்று காண்பிக்க, நாடியை நீவி விட்டவாறு யோசித்தவன், "ப்ரணவ் உங்க பர்த் இயர் சொல்லுங்க" என்று கேட்க, அவனும் யோசனையோடு தான் பிறந்த வருடத்தை சொன்னான்.


அடுத்தகணம் பாஸ்வர்டை உடைத்தான் ஹர்ஷா.


ஆராதியாவோ சட்டென நிமிர்ந்து ப்ரணவைப் பார்க்க, வேறு எங்கோ பார்த்தவாறு தலையை சொரிந்துக்கொண்டான் அவன்.


"நினைச்சதுதான்" என்றவன் அவளுக்கு இறுதியாக அழைப்பு வந்திருந்த எண்ணை புரியாமல் பார்த்தவாறு, "இந்த நம்பர உனக்கு முன்னாடியே தெரியுமா ஆரு?" என்று அந்த எண்ணை சொல்ல, ஆராதியாவோ தெரியாது என்ற ரீதியில் தலையசைத்தாள்.


"அந்த நம்பருக்கு ட்ரை பண்ணி பார்க்கலாம்" என்று ப்ரணவ் உடனே அந்த எண்ணிற்கு தன் அலைப்பேசி மூலமாக அழைக்க, மறுமுனையில் வாடிக்கையாளர் சேவையிலிருந்து ஒரு குரல் அந்த எண் எப்போதோ செயலிழந்து விட்டதாக அறிவித்தது.


"வாட் த ***... அந்த நம்பர் இப்போ இல்லையாம், அதெப்படி?" என்று ப்ரணவ் உச்சகட்ட கோபத்தில் அலைப்பேசியை தூக்கியெறியப் போக, ஹர்ஷாவோ நெற்றியைத் தட்டி தீவிரமாக யோசித்தான்.


"ப்ரணவ், இந்த நம்பர்லயிருந்து வந்த லாஸ்ட் காலோட லொகேஷன் எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்ல!" என்று ஆர்வமாக அவன் கேட்க, "யெஸ் ஹர்ஷா" என்ற மற்றவன் உடனே டிபார்ட்மென்ட்டிலுள்ள தன் ஆட்களில் ஒருவனுக்கு அழைத்தான்.


"வரதா, இப்போவே இந்த நம்பரோட லாஸ்ட் லொகேஷ் எந்த இடத்தை காட்டுதுன்னு சீக்கிரமா சொல்லு, திஸ் இஸ் சீக்ரெட் ஆப்ரேஷன்" என்று அவன் கட்டளையாகச் சொல்ல, "ஓகே சார்!" என்று உடனே தன் மேலதிகாரி சொன்ன வேலையை வேகமாகச் செய்தான் வரதன்.


வெறும் பத்து நிமிடங்கள்தான்.  


"சார், இந்த நம்பர ட்ரேஸ் பண்ணதுல இப்போ ரீச் பண்ண முடியல. பட், இதோடா லாஸ்ட் லொகேஷன் இந்த இடத்தை காமிக்குது" என்று அவன் சொன்ன மறுகணம் ஹர்ஷாவும் ப்ரணவும் அவன் சொன்ன இடத்தை நோக்கிச் சென்றனர்.


ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அந்த இடம் குப்பைகள் கொட்டப்பட்டிருக்க, இருவருக்கும் அத்தனை குழப்பம்.


"ஷீட் ஷீட் ஷீட்! அவன் நம்மள நல்லா டைவர்ட் பண்ணியிருக்கான். ச்சே!" என்று ஹர்ஷா கோபத்தில் தரையை காலால் உதைக்க, தலை முடியை அழுந்தக் கோதிக்கொண்ட ப்ரணவிற்கும் அவனை எப்படி கண்டுபிடிப்பதென்றே தெரியவில்லை.


அதேநேரம் தன் முன்னிருந்த ஸ்க்ரீனில் ஓடிக்கொண்டிருந்த அந்த கொடூர காணொளிகளை பார்க்க முடியாமல் கத்த ஆரம்பித்தாள் வைஷ்ணவி.


"ப்ளீஸ் அபி! வேணாம், ப்ளீஸ்..." என்று அவள் கெஞ்ச, அந்த காணொளியில் இதற்கு முன் அந்த ஐவரையும் கொன்ற காட்சிகள்தான் ஓடிக்கொண்டிருந்தது.


உயிரோடு கட்டப்பட்டிருந்த அவர்களின் நெஞ்சில் துடிக்கத் துடிக்க கூரிய கத்தியொன்றால் ஆழமாக க்ரோஸ் ஷேப்பில் வெட்டியவன், அவர்களின் கதறல் காதில் விழ அவர்களின் ஒரு கண்ணை வெட்டி வெளியில் எடுத்தான்.


அப்போதும் உயிர் பிரியாமல் அவர்கள் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் அதேசமயம் ஆண்களின் ஆணுறுப்பை அவன் அறுத்து எறிய, பெண்களின் ஒவ்வொரு விரல்களையும் கதறக் கதற வெட்டினான்.


அந்த ஐவரும் கொல்லப்படுவதை காணொளியாக பதிவு செய்து வைத்திருந்தவன் இப்போது அவளுக்கு அதை போட்டுக் காண்பிக்க, அதைப் பார்க்க முடியவில்லை அவளால்.


குடல் புரட்டி வாந்தி வருவது போல் இருக்க, தலையெல்லாம் சுற்ற ஆரம்பித்தது வைஷ்ணவிக்கு. கட்டப்பட்டிருந்த நிலையில் அப்படியே அவள் மயங்கி சரிய, அதைக் கூட உணராமல் திரையில் ஓடிக்கொண்டிருந்த காணொளியை சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தான் அபிமன்யு.


************


"ஹர்ஷா, அபிமன்யு உங்க ப்ரதர். கண்டிப்பா அவன பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். நல்லா யோசிச்சு பாருங்க, அவன உங்களால கண்டுபிடிக்க முடியும்" என்று ப்ரணவ் சொல்ல, நெற்றித் தட்டி யோசித்தவனுக்கு சுத்தமாக எந்த யோசனையும் வரவில்லை.


"நோ ப்ரணவ், ஐ ஹேவ் நோ ஐடியா. அவனோட ஃபோன் ரீச் ஆக மாட்டேங்குது. கண்டிப்பா அப்.. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இதை பத்தி தெரிஞ்சிருக்காது. இதை எப்படி சொல்ல போறேன்னு கூட எனக்கு தெரியல" என்று வார்த்தைகள் தடுமாற நிறுத்தியவன் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டு, "அவனுக்கு சம்பந்தப்பட்ட எல்லா இடங்கள்ளையும் தேடி பார்க்கலாம். சின்ன க்ளூ கிடைச்சா கூட அபிய நம்மளால ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்" என்று தன் திட்டத்தை சொன்னான்.


அதன்படி ப்ரணவ் ஒரு திசைக்கும் அவனோடு இந்த விசாரனையில் சம்பந்தப்பட்டிருக்கும் சில அதிகாரிகள் இன்னுமொரு திசைக்கும் தங்களின் தேடலை ஆரம்பித்திருக்க, தன் சகோதரனைப் பற்றி தேடித் திரிந்தான் ஹர்ஷா.


நேரம் கடக்க ஆராதியாவுக்கு லலிதாவுக்கும் அடி வயிறு கலங்கியது. உடன் நடப்பதை தெரிந்துக்கொள்ள தன்னவனுக்கு அழைத்தாள் அவள்.


"ஹர்ஷா, ஏதாச்சும் தகவல் கிடைச்சதா? ஒவ்வொரு நிமிஷம் தாமதிக்க வைஷுக்கு ஏதாவது ஆகிருமோன்னு பயமா இருக்கு" என்று ஆராதியா பயந்தபடி சொல்ல, ஹர்ஷாவிடமோ பதில் இல்லை.


யோசனையோடு அழைப்பைத் துண்டித்துவிட்டு அவன் ப்ரணவிற்கு அழைக்க, தன்னவளை எப்படி தேடுவதென்று தெரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டு நடுவீதியில் நின்றிருந்தான் மற்றவன்.


"உன்னை நான் விட்டிருக்க கூடாது, உனக்கு இருக்குற ஆபத்து தெரிஞ்சும் நான் கெயார்லெஸ்ஸா விட்டிருக்கேன். என் மேலதான் தப்பு, ஐ அம் சாரி வைஷு! உன்னை எப்படி கண்டுபிடிக்க போறேன்னு தெரியலயேடீ!" என்று மனதில் நினைத்த வண்ணம் அவன் விழிகளை மூடிக்கொள்ள, தன்னவளின்  நினைவில் அவனை அறியாமல் விழிநீரும் கசிந்தது.


சரியாக ஹர்ஷாவிடமிருந்து அழைப்பு வர, சட்டென புல்லட்டை நிறுத்திவிட்டு அழைப்பையேற்று பேசினான் ப்ரணவ்.


"என்னாச்சு ஹர்ஷா, ஏதாச்சும் க்ளூ கிடைச்சதா?" என்று அவன் ஆர்வமாகக் கேட்க, "நோ... அவனோட ஃப்ரென்ட் சர்கிள்ல எல்லார்கிட்டேயும் விசாரிச்சுட்டேன். பட் நோ யூஸ். வீட்டுக்கும் அவன் போகல. எங்க  இருக்கான்னு கெஸ் பண்ணவே முடியல" என்றான் ஹர்ஷா சோர்ந்துப் போய்.


பற்களைக் கோபத்தில் கடித்துக்கொண்டவன், "ஒருவேள அவன மட்டும் நான் கண்டுபிடிச்சேன்னா, ஐ வில் டெஃபெனெட்லி ஷூட் ஹிம். உங்க தம்பிங்குற பாரபட்சத்த கொஞ்சம் கூட நான் பார்க்க மாட்டேன்" என்று கறாராகச் சொல்ல, "அது இனி என்கிட்டயும் வேலைக்காகாது" என்று  நெற்றி நரம்புகள் புடைக்க அழுத்தமாக சொன்னான் ஹர்ஷா.


அதற்குமேல் ப்ரணவும் எதுவும் பேசாமல் அழைப்பைத் துண்டிக்க, சரியாக மானவ்விடமிருந்து அழைப்பு வந்தது.


திரையைப் பார்த்தவன், இடது பக்க புருவத்தை நீவி விட்டவாறு வேறு வழியில்லாமல் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.


"ஹெலோ ஹர்ஷா..." என்ற மானவ்வின் குரலில், "ஆங் சொல்லுங்க டாட்" என்று முயன்று வார்த்தைகளைக் கோர்த்து சொன்னான் அவன்.


"எங்க இருக்க நீ, உன்னை பார்த்தே டூ டேய்ஸ் ஆகுது. இந்த கேஸ் முடியுற வரைக்கும் நீ அதிகமா வெளியில இருக்காத ஹர்ஷா, மே பீ இட்ஸ் டேன்ஜரஸ்" என்று அவர் சொல்ல, "ம்ம்..." என்று மட்டும் சொன்னவனுக்கு பேச நா எழவில்லை.


"ஆமா... அபி எங்க ஹர்ஷா? அவன கான்டேக்ட் பண்ணவும் முடியல. அவன் ரொம்ப பாவம், லவ் ஃபெய்லியர் ஆனதுலயிருந்து ஒரு மாதிரியாவே இருக்கான். அவன நினைச்சுதான் என்னோட கவலையே! எனிவேய்ஸ், லண்டனுக்கு போறேன்னு சொல்லியிருக்கான். அவனுக்கு ஏதாச்சும் ஒரு நல்லது நடக்கணும்டா" 


என்று ஒரு தந்தையாக அவர் கவலையோடு சொல்ல, ஏனோ ஹர்ஷாவுக்கு அழுகையில் தொண்டை அடைத்தது. 


நாவு வரை வந்த வார்த்தைகளை விழுங்கி உள்ளுக்குள் அடக்கிக்கொண்டவன், "டாட் அது... ஐ ஹேவ் அன் இம்பார்டென்ட் வர்க். நான் உங்க கூட அப்பறமா பேசுறேன்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டிக்கப் போக, "ஹர்ஷா..." என்று மீண்டும் அழைத்தார் மானவ்.


"என்ன டாட்?" என்று அவன் கேட்க, "ஆர் யூ ஓகே?" என்ற தந்தையின் வார்த்தைகளில் அவனுடைய  விழிகள் கலங்க கண்ணீரும் வந்துவிட்டது.


தந்தையிடம் நிலையை சொல்லி அழ மனம் துடிக்க, எச்சிலை விழுங்கிக்கொண்டவன், "ஃபைன் டாட்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.


ஆனால், பாசத்துக்காக தவறை மன்னிக்க முடியாதே!


விழிகளை அழுந்த மூடித் திறந்து அவன் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வர, அப்போதுதான் ஏதோ ஒன்று அவனுடைய மூளைக்குள் உரைத்தது.


உடனே அவன் ப்ரணவிற்கு மீண்டும் அழைக்க, அதேநேரம் தேடித் தேடி களைத்துப் போய் நடுவீதியில் தன் அதிகாரத்தைக் கூட மறந்து மூச்சு வாங்கியவாறு அமர்ந்திருந்தான் ப்ரணவ்.


"அப்போ எல்லாமே அவ்வளவுதானா, என்னால அவள காப்பாத்த முடியாதா?" என்று அவனுடைய மனம் மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்க, வைஷ்ணவியின் பார்வையும் சிரிக்கும் இதழ்களுமே அவனின் மனக்கண் முன் விம்பங்களாக ஓடின.


அந்த நினைவில் அவனுடைய விழிகளும் கலங்க, கீழுதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கிக்கொண்டான் ப்ரணவ். 


சரியாக, அவனுக்கு ஹர்ஷாவிடமிருந்து அழைப்பு வந்தது.


எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், "சொல்லுங்க ஹர்ஷா..." என்று உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட குரலில் அவன் சொல்ல, "ப்ரணவ், நாம ஏன் இந்த கேஸ்ஸ ரொம்ப க்ரிட்டிக்கல்ல யோசிக்கிறோம். ஈஸியா திங் பண்ணலாமே!" என்றான் மற்றவன் யோசனையோடு.


"என்ன சொல்றீங்க, எனக்கு புரியல" என்று ப்ரணவ் புரியாமல் விழிகளை சுருக்க, "அபி ரொம்ப புத்திசாலி, மே பீ நமக்கே பழக்கப்பட்ட ரொம்ப தெரிஞ்ச இடத்துல கூட வச்சிருக்கலாம். சுத்தி எல்லா  இடத்துலயும் தேடுற நாம அந்த குறிப்பிட்ட இடங்கள்ல வாய்ப்பே இல்லன்னு அசால்ட்டா விட்டுருவோம். இப்போ அந்த இடங்களதான் பார்க்கணும்" என்றான் ஹர்ஷா அழுத்தமாக.


ப்ரணவிற்கு அவன் சொல்ல வருவது நன்றாகவே புரிந்தது. 'இருக்கலாம்...' என்று மனம் அடித்துக் கூற, உடனே தன் புல்லட்டை உயிர்ப்பித்தான் அவன்.


"இப்போ எங்க போக போறோம்?" என்று கேட்ட ப்ரணவ், "என்னோட  வீடு" என்று மற்றவன் சொன்னதுமே மின்னல் வேகத்தில் அந்த இடத்தை நோக்கி சென்றிருந்தான்.


பைக் விழுந்ததைக் கூட கண்டுகொள்ளாமல் வீட்டிற்குள் வேகமாக நுழைந்த ஹர்ஷா, அந்த பெரிய வீட்டில் ஒரு இடத்தைக் கூட விடாது அலசி ஆராய, ஹால் சோஃபாவிலிருந்த மஞ்சுளாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.


"ஹர்ஷா, என்னாச்சு?" என்று அவர் பதற்றமாகக் கேட்க, "அது... அதெல்லாம் ஒன்னு இல்லம்மா. நான் அபிய தேடி வந்தேன், அவன் கூட பேசணும் அதான்..." என்று அவன் சமாளிக்க முயற்சிக்க, அவரோ தன் மகனை குழப்பமாகப் பார்த்தார்.


"அபியா! நேத்து ராத்திரியில இருந்து அவன் வீட்டுக்கே வரல ஹர்ஷா, என்ன பண்றான் ஏது பண்றான்னு ஒன்னுமே தெரியல. இன்னும் டூ டேய்ஸ்ல லண்டன் கெளம்ப போறான், இதுக்கப்பறம் எப்போதான் பொறுப்புன்னு ஒன்னு வருமோ தெரியல" என்று அவர் புலம்பிக்கொண்டே போக, இதற்குமேல் இங்கு தேடுவது பயனில்லை என வெளியேறப் போனான் ஹர்ஷா.


ஆனால் அடுத்தகணம் மஞ்சுளா சொன்ன வார்த்தைகளில் அவனுடைய நடை சட்டென நிற்க, உடனே திரும்பிப் பார்த்தான்.


"கண்ணா, எனக்கு இப்போதான் ஒன்னு ஞாபகத்துக்கு வருது. நேத்து ராத்திரி கெஸ் ஹவுஸ்ல ஸ்டே பண்றதா சொல்லிதான் கெளம்பினான். க்ளீன் பண்ண வந்த அம்மாவ கூட டூ டேய்ஸ்க்கு வேலைக்கு வர வேணாம்னு அனுப்பி விட்டுட்டானாம். என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்னே தெரியல. கேட்டதுக்கு தனியா இருக்கணும், டிப்ரெஷனா இருக்குன்னு சொல்லியிருக்கான்டா, உங்க இரண்டு பேரையும் பெத்து வளர்த்ததுக்கு நான்தான் டிப்ரெஷனுக்கு போகணும், உங்களுக்கு என்னடா டிப்ரெஷன்?" 


என்று அவர் பேசிக்கொண்டே போக, வேறு எதையும் கண்டுகொள்ளாமல் அவன் வெளியேறி பைக்கை உயிர்ப்பிக்கப் போக, அவனின் எதிரே சரியாக வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தினான் ப்ரணவ்.


"ஹர்ஷா, ஏதாச்சும் க்ளூ கிடைச்சதா? அபி எங்க இருக்கான்?" என்று ப்ரணவ் கத்திய கத்தலில் மஞ்சுளாவோ வெளியில் வந்து எட்டிப் பார்க்க, விழிகளால் எச்சரிக்கும் விதமாக சைகை செய்தான் அவன்.


"ஹர்ஷா, இது இன்ஸ்பெக்டர் ப்ரணவ்தானே, இவர் உனக்கு தெரிஞ்சவரா?" என்று பெரியவர் சந்தேகத்தோடுக் கேட்க, "அது...  ஆமாம்மா, இப்போதான் கொஞ்சநாளா பழக்கம்" என்றவன், "கம் ஆன் ப்ரணவ், இட்ஸ் கெட்டிங் லேட்" என்று அவனை அவசரப்படுத்தி வேகமாக  இழுத்துக்கொண்டு சென்றான்.


"அம்மா அப்பாவுக்கு எதுவும் தெரியாதா?" என்று ப்ரணவ் கூரிய விழிகளோடுக் கேட்க, இல்லையெனும் விதமாக தலையாட்டியவனைப் பார்க்க, அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு.


'ஊஃப்ப்...' என்று ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டவன், "இட்ஸ் பெட்டர் டூ டெல் தெம் ட்ருத், அதுக்கப்பறம் தெரியும் போது  ரொம்ப கஷ்டப்படுவாங்க" என்று சொல்ல, இறுகிய முகமாக அவனைப் பார்த்த ஹர்ஷா, "அபி இருக்குற இடத்தை கண்டுபிடிச்சாச்சு" என்றான் உணர்ச்சிகளற்ற குரலில்.


ப்ரணவோ அவனை வெற்றிப் புன்னகையோடு பார்க்க, அதேநேரம் வைஷ்ணவியின் தலையில் அதிக குளிரோடு ஒரு வாளி தண்ணீரை ஊற்றினான் அபிமன்யு.


மயக்கம் தெளிந்து கண் விழித்தவளுக்கு உடல் நடுங்கிவிட்டது. அதிர்ந்துப் போய் தன்னெதிரே நின்றிருந்தவனை அவள் பார்க்க, கையில் சில கத்தி குறடு போன்ற பொருட்களோடு அவளின் அருகே வந்தமர்ந்தான் அவன்.


"அபி, வேணாம் ப்ளீஸ்... என.. என்னை விட்டுரு! கெஞ்சி கேக்குறேன்" என்று வைஷ்ணவி கெஞ்ச ஆரம்பிக்க, "அய்யோ பயப்படாத வைஷு! நாம எல்லாரும் இப்போ ஒன்னுக்குள்ள ஒன்னாகிட்டோம், என் அண்ணா உன் அக்காவ கட்டிக்க போறாரு. தென் வை ஆர் யூ அஃப்ரைட் ஆஃப் மீ? ச்சில்..." என்றான் ஒரு மாதிரி சிரித்துக்கொண்டு.


அவளோ எச்சிலை விழுங்கிக்கொண்டவள் அவனை பயத்தோடு பார்த்துக்கொண்டிருக்க, அவளின் காலை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்ட அபி, "ஆனா இதெல்லாம் நடக்கும் போது நீ உயிரோட இருப்பியோ என்னவோ! ஓ காட்... என்ன இது, நகம் இப்படி வளர்ந்திருக்கு. இரு நானே வெட்டி விடுறேன்" என்றுக்கொண்டே பக்கத்திலிருந்த குறடை கையிலெடுத்தான்.


"அபி வேணாம்! ப்ளீஸ்..." என்று அவள் பயத்தில் அழ ஆரம்பிக்க, குறடால் அவளின் பெருவிரல் நகத்தை அவளின் கதறல் ஒலி காதில் கேட்க பிய்த்து எடுத்தான் அபிமன்யு.


"ஆஆஆ... அம்மா..." 


என்ற வைஷ்ணவியின் கதறல் அந்த அறையையே அதிர வைத்தது.


**********


மையவிழிப் பார்வை 21

https://agnitamilnovels.blogspot.com/2025/07/21.html

 

Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚