மையவிழிப் பார்வை 17
"மீரா என்னோட ஃப்ரென்டுதான் அக்கா. காலேஜ்ல க்ரிஷ், கரண், அனிதா, ப்ரீத்தி, வினய் என்ட் அபி நாங்க எல்லாரும் ஒன்னாதான் இருப்போம். ஆனா காலேஜ் முடிஞ்சதுலயிருந்து அவ்வளவா நானும் அபியும் அவங்க கூட பழகுறதில்ல. கொஞ்சநாள்ல கான்டேக்ட் கூட இல்லாம இருந்தோம்.
அப்போதான் எனக்கு மீரா வர்க் ஷாப் போனப்போ ஃப்ரென்ட் ஆனா. ரொம்ப சாஃப்ட் வெகுளின்னு கூட சொல்லலாம். அப்போதான் எங்க பேட்ச்ல கொஞ்ச பேர் டூர் ப்ளான் பண்றதா சொன்னாங்க. அங்க நான் போயிருக்கவே கூடாது, அதுவும் மீராவ அழைச்சுட்டு போயிருக்க கூடாது"
என்று நிறுத்திய வைஷ்ணவியின் நினைவுகள் டூரில் நடந்த அந்த கசப்பான சம்பவத்தை மீட்டின.
"ஏய் வைஷு, எந்த எக்ஸ்கியூஸும் எங்ககிட்ட சொல்லாத. நம்ம பேட்ச்ல எல்லாரும் வராங்க. நீ கண்டிப்பா வரணும்" என்று ப்ரீத்தி சொல்ல, "அது... அது வந்து..." என்று தயக்கமாக இழுத்த வைஷ்ணவி, "சரி, நான் வரேன். வெளியாளுங்கள அழைச்சுட்டு வந்தா எந்த பிரச்சனையும் இல்லல்ல" என்று கேட்டாள் ஆர்வமாக.
"நோ நோ... தாராளமா யாரை வேணா அழைச்சுட்டு வா, பட் ரொம்ப வயசானதுங்களா இருக்காம இருந்தா சரி" என்று கேலியாக அவள் சொல்ல, "ஓகே ப்ரீத்தி, டூர்ல பார்க்கலாம்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்த வைஷ்ணவிக்கு மீராவை தன்னுடன் வர சம்மதிக்க வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.
அடுத்த இரண்டு வாரங்களில் சுற்றுலா செல்வதற்கான நாளும் வர, அவர்கள் படித்த கல்லூரி வாசலுக்கே அந்த பெரிய பஸ் கொண்டு வரப்பட, மொத்தப் பேரும் நேரத்துக்கு ஆஜராகினர்.
"இங்க எனக்கு யாரையுமே தெரியாது, ஏன் வைஷு? நான் அக்கா கூடவே இருந்திருப்பேன்" என்று மீரா பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு புலம்ப, "என்னை தெரியும்ல, அது போதும் உனக்கு" என்ற வைஷ்ணவி பல நாட்கள் கழித்து பார்க்கும் தோழமைகளோடு பேச ஆரம்பிக்க, அவள் பக்கத்தில் நின்றிருந்தாள் மற்றவள்.
சரியாக யாரோ அவளையே பார்த்துக்கொண்டிருப்பது போல ஒரு பிரம்மை. புருவத்தை நெறித்தவள் அந்த ஊசித் துளைக்கும் பார்வையில் மனம் சொன்ன திசைக்குத் திரும்பிப் பார்க்க, அங்கோ யாருமில்லை.
சுற்றிமுற்றி பார்த்துவிட்டு மீண்டும் அவள் வைஷ்ணவியின் புறம் திரும்ப, அப்போதுதான் அவர்களுக்கருகே வந்து நின்றனர் அந்த ஐவரும்.
"அட உன் ஃப்ரென்டா வைஷு, நைஸ் டூ மீட் யூ" என்ற அனிதா மீராவையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்த கரணின் வயிற்றில் முழங்கையால் குத்த, அவனோ அசடுவழிந்துக்கொண்டான் என்றால் க்ரிஷ் மற்றும் வினய்யின் பார்வையோ அவளை மேலிருந்து கீழ் அளவிட்டது.
அந்த பார்வையில் உண்டான அருவருப்பில் முகத்தை சுருக்கியவாறு தோழியின் பின்னே அவள் ஒளிந்துக்கொள்ள, "ரொம்பதான்!" என்று சிறு பொறாமையோடு உதட்டைப் பிதுக்கிவாறு அங்கிருந்து நகர்ந்தாள் ப்ரீத்தி.
அவள் பின்னாலேயே மற்ற நால்வரும் செல்ல, ஆடவர்களின் பார்வைதான் மீராவையே சுற்றி வட்டமடித்தது. வண்டி செல்வதற்கான நேரமும் நெருங்க, நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் தோழியோடு வண்டியில் ஏறிக்கொண்டாள் மீரா.
மூன்று நாட்களுக்கான சுற்றுலா அது. அத்தனை பேரும் ஒவ்வொரு தருணங்களையும் முழு சந்தோஷத்தோடு அனுபவிக்க, அந்த மூன்று ஆடவர்களின் பார்வையிலிருந்தும் தொடுகையிலிருந்தும் விலகியேதான் இருந்தாள் மீரா.
வைஷ்ணவியின் பின்னாலேயே குட்டி போட்ட பூனைப் போல் சுற்றிக்கொண்டிருப்பவள் வைஷ்ணவியிடம் இதைப் பற்றி சொல்லாது விட்டிருக்க,எல்லாமே நன்றாகத்தான் சென்றுக்கொண்டிருந்தது, மூன்றாவது நாளுக்கான இரவு வரை.
அன்று மூன்று பேருக்கு ஒரு அறை என்ற கணக்கில் அத்தனை பேரும் தங்குவதற்காக ஆடம்பரமான ரிசார்ட் ஒன்று புக் செய்யப்பட்டிருக்க, இவர்களின் சுற்றுலா பேருந்தும் அந்த அழகிய இடத்திற்கு முன் நின்றது.
யாரையோ பின்னே திரும்பி அடிக்கடி பார்த்தபடி நடந்து வந்துக்கொண்டிருந்த மீராவை மற்றவளும் கவனிக்காமல் இல்லை.
"என்னாச்சு உனக்கு, யாரை பார்த்து பார்த்து வர்ற. இந்த மூனு நாள்ல உன் நடவடிக்கையே சரியில்ல" என்று வைஷ்ணவி குறும்புப் புன்னகையோடு சொல்ல, "அது... அப்படியெல்லாம் எதுவுமில்லையே!" என்று சிறு தடுமாற்றத்தோடு சமாளித்தவள் தங்களுக்கான அறையில் நுழைந்து கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள்.
வைஷ்ணவியோ குளியலறைக்கு செல்வதற்காக துணிகளை எடுத்துக்கொள்ள, மெல்லிய புன்னகையோடு யாருக்கோ அலைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள் மீரா.
இதைப் பார்த்த அவள் தோழியின் விழிகளோ சந்தேகத்தில் சுருங்கின.
"ஏதோ இருக்கு, காய்கறி முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகணும்" என்று நொடிந்துக்கொண்டவாறு குளியலறைக்குள் புகுந்துக்கொண்டாள் அவள்.
அதேநேரம் தங்களின் அறையில் கரண், வினய் மற்றும் க்ரிஷ் மூக்கு முட்ட குடித்துக்கொண்டிருக்க, பக்கத்தில் அனிதாவும் ப்ரீத்தியும் சிகரெட்டை ஊதித் தள்ளியவாறு அமர்ந்திருந்தனர்.
"என்னடா இது, ஏதோ ஸ்கூல் டூர் மாதிரி ஒரு கிக்கே இல்லாம இருக்கு. நாளைக்கு காலையில கெளம்புறதுக்குள்ள இந்த போதைய விட பெருசா ஒரு போதைய அனுபவிக்கணும்டா" என்று வினய் போதையில் குளறியபடி சொல்ல, அவனை விஷம சிரிப்போடு பார்த்தான் கரண்.
"எனக்கு தோனினதுதான் உனக்கும் தோனியிருக்குன்னு நான் நினைக்கிறேன். நீ என்னடா சொல்லுற க்ரிஷ்?" என்று அவன் ஆர்வமாகக் கேட்க, "இதனால பிரச்சனை எதுவும் வந்துடாதே, அவ நம்ம காலேஜ் கூட கிடையாது. வைஷ்ணவியோட ஃப்ரென்டு" என்று சிறு பயத்தோடு சொன்னான் க்ரிஷ்.
"ஓ காட்! காய்ஸ் ஆர் யூ சீரியஸ்? அவ என்ன அவ்வளவு அழகாவா இருக்கா?" என்று ப்ரீத்தி விழிகளில் வன்மத்தோடு கேட்க, "உங்க இரண்டு பேர விட சூப்பர் ஃபிகர் அவ" என்று சொல்லி மூன்று ஆடவர்களும், 'ச்சீயர்ஸ்ஸ்...' என்று மதுக்குவளைகளை மோதி அப்படியே சிரித்தவாறு வாயில் சரித்தனர்.
இதில் இந்த இருவருக்கும் வயிறு பற்றியெறிந்தது.
"சரி விடு அனி, உங்கள விட்டா எங்களுக்கு வேற யாரு இருக்கா. நீங்கதானே எப்படியாச்சும் அவள இங்க அழைச்சுட்டு வரணும்" என்று அனிதாவின் கன்னத்தைத் தடவியவாறு கரண் சொல்ல, "வாட்! என்னால முடியாது. நான் கூப்பிட்டா வந்துடுவாளா என்ன?" என்று அதிர்ச்சியாகக் கேட்டாள் அனிதா.
"அவள கூப்பிட்டு எங்கள வம்புல மாட்டி விட போறீங்களா இடியட்ஸ்" என்று ப்ரீத்தியும் பதிலுக்கு கத்த, "நோ நோ... சும்மா அந்த பொண்ண டீஸ் பண்ணதான், வேற எதுவும் இல்லை. ட்ரஸ்ட் மீ!" என்று போலியாக சத்தியம் செய்தான் வினய்.
"இப்போ வேணாம், எல்லாரும் தூங்கினதும் போய் அவள அழைச்சுட்டு வாங்க" என்று க்ரிஷ் சொல்ல, "அப்போ அந்த வைஷ்ணவி..." என்று அனிதா தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
"இது சிந்திக்க வேண்டிய விஷயம்தான்" என்று நாடியை நீவிவிட்டவாறு கரண் யோசிக்க, மற்றவர்களும் புரியாமல் பார்த்தனர்.
"இப்போ என்ன, அவள அழைச்சுட்டு வரணும். அவ்வளவுதானே! வைஷ்ணவிய நான் பார்த்துக்குறேன்" என்று ப்ரீத்தி சொல்லிவிட்டு சிகரெட் புகையை ஊதித் தள்ள, இதை அறியாமல் வைஷ்ணவி நிம்மதியாக உறங்கியிருக்க, குறுஞ்செய்தி பரிமாற்றத்தில் மூழ்கிப் போயிருந்தாள் மீரா.
நேரம் கடக்க, கிட்டத்தட்ட பாட்டு பாடி ஆட்டம் போட்டு களைத்துப் போய் எல்லாரும் தத்தமது அறைக்குள் நுழைந்திருந்தனர்.
எல்லோரும் உறக்கத்தை தழுவியிருந்த அதேநேரம் தனக்கு வந்த குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டு வைஷ்ணவியை வேகமாகப் பார்த்தாள் மற்றவள்.
வைஷ்ணவி ஆழ்ந்த உறக்கத்திலிருப்பதை அவளுடைய சீரான மூச்சுக்காற்றே வெளிப்படுத்த, மெல்ல அறையிலிருந்து வெளியேறி சுற்றி முற்றி பார்த்தவாறு நடந்தாள் மீரா.
அதேநேரம் மீராவை அழைக்கவென வந்த ப்ரீத்தியின் விழிகளுக்கு இவள் சிக்க, அவளுடைய இதழ்களோ கேலியாக வளைந்தன.
'மீனே வந்து வலையில சிக்குதே!' என்று முணுமுணுத்தவாறு அவளை நோக்கிச் சென்றவள், "ஹாய் மீரா, என்ன இந்த பக்கம்?" என்று கேட்க, அங்கு அவளை எதிர்பார்க்காதவளாக அதிர்ந்து நின்றவள், "அது... அது வந்து... சும்மாதான்" என்று சமாளிக்க முயற்சித்தாள்.
"ஓஹோ... இஃப் யூ டோன்ட் மைன்ட் நாம வேணா கொஞ்சம் நேரம் பேசலாமா?" என்று ப்ரீத்தி விழிகள் மின்ன கேட்க, என்ன சொல்லி மறுப்பதென்று தெரியாமல் வேறுவழியில்லாமல் அவள் தலையாட்டி வைக்க, அதுவோ போதுமென்றானது ப்ரீத்தீக்கு.
அடுத்தகணமே அவளை அழைத்துக்கொண்டு தங்களின் அறைக்குச் சென்றவள், "காய்ஸ் நம்ம ரூமுக்கு விருந்தாளி வந்திருக்காங்க. லெட்ஸ் வெல்கம் ஹெர்" என்று சொன்னபடி கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே செல்ல, பின்னே சென்ற மீராவுக்கு அந்த அறையிலிருந்து வந்த நெடியும் மது போத்தல்களும் விழிகளில் சரியாக சிக்கின.
அதில் முகத்தை அஷ்டகோணலாக சுருக்கியவளுக்கு அந்த இடமே ஒரு பயத்தைக் கொடுக்க, அதற்கும் மேல் அங்கு போதையிலிருந்த மூன்று ஆடவர்களை பார்த்ததும் அவளுக்கு அடி வயிறு கலங்க ஆரம்பித்தது.
ஏதோ ஒன்று சரியில்லை என்று மட்டும் அவள் மனம் எச்சரிக்க, "நா.. நான் போகணும்" என்றுக்கொண்டே கதவை நோக்கி திரும்பியவளின் கரத்தைப் பற்றி இழுத்த கரண் அவளை மெத்தையில் தள்ளிவிட, கதவை தாழிட்டாள் அனிதா.
"எங்க பசங்க கொஞ்சம் உன் கூட விளையாடணுமாம், அதான்... பயப்படாத! நல்ல பசங்க மீரா" என்று ப்ரீத்தி சொல்ல, மீராவுக்கோ ஒருநொடியில் உலகமே தலை கீழானது போலிருந்தது.
"ப்ளீஸ் என்னை விடுங்க! ப்ளீஸ்... வைஷ்ணவி... வைஷு... அய்யோ! என்னை விட்டுருங்க, எனக்கு பயமா இருக்கு" என்று மீரா பயத்தில் கதறியழ ஆரம்பிக்க, "இவ கத்தியே நம்மள பிரச்சனையில இழுத்து விட்டுருவா போல, மொதல்ல இவ கைய கட்டிவிட்டு வாய மூடுங்கடா" என்று கத்தினான் வினய்.
உடனே ப்ரீத்தி அவளுடைய வாயில் ஒரு துணியை வைத்து அடைத்து விட, அவள் திமிற திமிற அவளுடைய கைகளை கட்டிவிட்டான் க்ரிஷ்.
கரணோ தன் அலைப்பேசியை அனிதாவிடம் நீட்டி விழிகளால் காமிக்க, அதை புரிந்துக்கொண்டவள் கேமராவை ஆன் செய்து நடப்பதை படம்பிடிக்க ஆரம்பித்தாள்.
மீராவுக்கு பயத்தில் உடல் வெடவெடக்க, விழிகளிலிருந்து விழிநீர் அருவியாக ஓடியது. ஆனால் அந்த மூன்று காமுகன்களுக்கு அந்த பெண்ணின் கண்ணீரும் வலியும் புரியவே இல்லை.
கரணோ அவளின் ஆடையிலுள்ள பட்டன்கள் ஒவ்வொன்றையும் கழற்றிக்கொண்டே அவளை நெருங்க, "ஏய் கரண், என்ன பண்றீங்க? ஜஸ்ட் அவள டீஸ் பண்றதுன்னுதானே சொன்னீங்க. இப்போ பண்றதா பார்த்தா அப்படி தெரியல்லையே!" என்று சிறு அதிர்ச்சியோடுக் கேட்டாள் ப்ரீத்தி.
"ப்ரீத்தி, ப்ளீஸ்! மூனு நாளா இந்த மூமென்ட்டுக்காக எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா? நீ வீடியோ மட்டும் பண்ணு" என்றவன், "கொஞ்சநேரம்தான், அப்பறம் நீ உன் வைஷுகிட்டயே போகலாம்" என்றுவிட்டு அவளுடலை மேயத் தொடங்க, கதறித் துடித்தாள் பெண்ணவள்.
அடுத்தடுத்த மூன்று காமுகன்களும் தங்களின் வேட்கையை அவளிடம் தீர்த்துக்கொள்ள, எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனத்தோடு கிடந்தவளுக்கு உடல் வலியை விட மன வலி கொல்லாமல் கொன்றது.
ஆனால் யாருமே எதிர்பார்க்காதது போல் திடீரென கதவு வேகமாகத் தட்டப்பட்டது.
"ஏய் யார் அது?" என்று க்ரிஷ் பதற்றமாகக் கேட்க, அனிதாவோ கதவை லேசாகத் திறந்தவள், வெளியில் நின்றிருந்தவளைப் பார்த்து கதவை மூடப் போக, அதைத் தடுத்தாள் வைஷ்ணவி.
அனிதாவை மூடி விடாது கதவை தன் மொத்த பலத்தையும் சேர்த்து தள்ளிவிட்டு வேகமாக உள்ளே நுழைந்த வைஷ்ணவி, தன் தோழி இருந்த நிலையைப் பார்த்து ஸ்தம்பித்துப் போய் நிற்க, கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் கத்த கூட முடியாமல் கிடந்திருந்தாள் மீரா.
வைஷ்ணவிக்கோ விழிகள் கலங்கி கண்ணீர் ஓட, இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல சட்டையை சரிசெய்தவாறு எழுந்து நின்ற மூன்று ஆடவர்களும் கேலியாக சிரித்தனர்.
"மீரா... அய்யோ! மீரா..." என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தவள் வேகமாக சென்று அவளை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு வாயிலிருந்த துணியையும் எடுத்துவிட, மின்னல் வேகத்தில் தன் தோழியை அணைத்துக்கொண்டு கதறியழ ஆரம்பித்தாள் மீரா.
"இவங்க... இவங்க என்னை... என்னை கூட்டிட்டு போயிடு வைஷு... என்னால இந்த வலிய தாங்க முடியல" என்று அவள் கதறியழ, வைஷ்ணவிக்கு இது கனவாக இருக்கக் கூடாதா என்றுதான் இருந்தது.
"நான் உன்னை இங்க அழைச்சுட்டே வந்திருக்க கூடாது, என் தப்புதான்... என் தப்புதான் மீரா" என்று வேதனையோடு சொன்னவள், "ச்சீ... நீங்க எல்லாம் மனுஷங்கதானா! இதை நான் சும்மா விட போறதில்ல. இப்போவே எல்லார்கிட்டேயும் சொல்லி போலீஸுக்கு கால் பண்ண போறேன்" என்று அத்தனை பேரின் புறம் திரும்பி மிரட்டினாள்.
ஆனால், அவர்களின் முகத்தில் எந்த பயமோ பதற்றமோ இல்லை.
"ரியலி! போ.. போய் சொல்லிக்கோ... நீ போய் சொன்ன அடுத்த செக்கன் இந்த வீடியோதான் பார்ச் சைட்ல ட்ரென்டிங்ல இருக்கும்" என்று சொல்லி அந்த காணொளியைக் காட்ட, விழி விரித்து நின்றுவிட்டாள் வைஷ்ணவி.
எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனத்தோடு முகமெல்லாமே வெளுத்துப் போய் அறையிலிருந்து வெளியே வந்த இரு பெண்களும், அன்றைய இரவை தூங்கா இரவாக கழிக்க, அடுத்தநாள் அங்கிருந்து வெளியேறுவதற்காக எல்லோருமே தயார் நிலையில் இருந்தன.
"வைஷு, இதுக்கு தண்டனை கிடைக்காதா? அப்போ அவ்வளவுதானா?" என்று வலி நிறைந்த குரலில் மீரா கேட்க, அவளை கலக்கமாக முகத்தோடு பார்த்த வைஷ்ணவிக்கு தன் மனதிலிருப்பதை சொல்லவே அத்தனை தயக்கமாக இருந்தது.
ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு, "இதை இங்கேயே விட்டுருவோம் மீரா, இதை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு" என்று அவள் சொன்னதும், தன் காதில் விழுந்த தோழியின் வார்த்தைகளை நம்ப முடியாமல் திகைத்துப் போய் பார்த்தாள் மற்றவள்.
"நீயா வைஷு இப்படி பேசுற?" அதிர்ச்சியோடு வெளிவந்தன மீராவின் வார்த்தைகள்.
"நான் சொல்றத புரிஞ்சுக்கோ மீரா, அவங்க கிட்ட உன் வீடியோ இருக்கு. ஒருவேள நாம ஏதாச்சும் பண்ண போய் அவனுங்க அதை ஷெயார் பண்ணிட்டாங்கன்னா உனக்குதான் வெளியில தலை காட்ட முடியாது. அதான் சொல்றேன். என்னை மன்னிச்சிரு மீரா, என்னால இதை தவிர வேற எதையும் யோசிக்க முடியல. இது உன் நல்லதுக்காகத்தான்" என்று விழிநீரோடு சொல்லி தோழியை அணைத்துக்கொண்டாள் வைஷ்ணவி.
அவளை உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு வெறித்துப் பார்த்தவள், அதற்குமேல் எதுவும் பேசவில்லை. அடுத்த சில மணித்தியாலங்களில் அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு வந்து சேர்ந்த மீராவின் முகமோ இருண்டுப் போயிருந்தது.
தன் சகோதரியின் முகத்தை கவனித்த நந்தினி, "என்னாச்சு மீரா, ஏன் உன் முகமே சரியில்ல?" என்று சந்தேகமாகக் கேட்க, "அதெல்லாம் ஒன்னும் இல்லை அக்கா, டயர்ட் அதான்..." என்றுவிட்டு வழக்கத்திற்கு மாறாக அவளை அணைத்துக்கொள்ள, ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தாலும் புன்னகையோடு அவளை அணைத்து விடுவித்தாள் நந்தினி.
அதன்பிறகு அறைக்குள் நுழைந்தவள் இரவுணவுக்கு கூட வெளியில் வரவில்லை. நந்தினியின் மனதிற்கும் ஏதோ சரியில்லை என்று மட்டும் தோன்றியது.
"மீரா... மீரா கதவ திற! நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று கதவைத் தட்ட, உள்ளே கட்டிலில் அமர்ந்திருந்தவளோ அலைப்பேசியில் ஒரு வாய்ஸை ரெக்கார்ட் செய்து அதை ஒரு எண்ணிற்கு அனுப்பி வைத்தாள்.
அடுத்தகணம் அந்த எண்ணிலிருந்து அழைப்பு வர, அதை விழிகள் கலங்க பார்த்தவள் அலைப்பேசியை கட்டிலில் தூக்கிப் போட்டாள்.
அடுத்த நிமிடம் தான் எடுத்த முடிவை அவள் அமுல்படுத்த, இத்தனை நேரம் கதவை தட்டியும் திறக்காததில் தமக்கையோ பதறிவிட்டாள்.
"மீரா... மீரா..." என்று அடித் தொண்டையிலிருந்து பயத்தோடு கத்தியவள் மொத்த பலத்தையும் சேர்த்து கதவை தள்ளிவிட, உள்ளே நுழைந்தவளுக்கு அங்கு கண்ட காட்சியில் சர்வமும் அடங்கிவிட்டது.
அங்கு மீராவின் உடல் தூக்கிலிடப்பட்டு உடலோ உயிர் பிரியும் வலியில் துடித்துக்கொண்டிருக்க, இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை நந்தினி.
************
மையவிழிப் பார்வை 18 >>
https://agnitamilnovels.blogspot.com/2025/07/18.html
தஷுரி, ரதியின் ரணதீரன் கதைகள் Kobo writing life ல இருக்கு... கிட்டத்தட்ட அமேசன் மாதிரி தான்.. Kobo plus subscription பண்ணா மன்த்லி ஃப்ரீயா எல்லா கதைகளும் ரீட் பண்ணலாம்...
IN link 👇
USA link 👇
Comments
Post a Comment