விழிகள் 23




இத்தனை நேரம் வீரா பேசியதை நினைத்து உறக்கமின்றி அழுது கரைந்த இந்திரா அப்போதுதான் மெல்ல விழிகளை மூடி ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல, திடீரென அவளுடைய அறைக்குள் நுழைந்தது அந்த உருவம்.


அவளுடைய அறையில் தடுமாறிய அந்த நிழலுருவம் இப்போது உறங்கிக்கொண்டிருந்த இந்திராவை மெல்ல நெருங்க, உள்ளுக்குள் மனம் எச்சரிக்க பட்டென்று விழிகளைத் திறந்தவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.


"ஆஆ..." என்று அதிர்ச்சியில் கத்தப் போனவளின் வாயை உடனே பொத்திக்கொண்ட வீரா, "எதுக்கு இப்போ கத்துற, அதான் நான்தான்னு தெரியுதுல்ல. அப்பறமென்ன?" என்று பதற்றமாகக் கேட்க, அவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தாள் இந்திரா.


தன் வாயை பொத்தியிருந்த அவனின் கரத்தை உதறிவிட்டவள், "என்ன விளையாட்டு இது வீரா, காவலர்கள் யாராவது பார்த்தால் அவ்வளவுதான். முதலில் இங்கிருந்து செல், இல்லையென்றால்..." என்று பொரிந்துக்கொண்டே போக, "அரசருக்கே நம்ம விஷயம் தெரிஞ்சிருச்சு. இதுக்கப்பறம் எதுக்கு நான் ஓடி ஒளியணும்? பார்த்துக்கலாம்" என்றவன் சோம்பல் முறித்தவாறு அவளுடைய கட்டிலில் படுத்துக்கொண்டான்.


அவனை முறைத்துப் பார்த்தவள், "எதுவும் தேவையில்லை, இப்போ எதற்கு நீ இங்கு வந்தாய்? என்னைப் பற்றிதான் தங்களுக்கு கவலையே இல்லையே, என் மீது காதலும் இல்லை. பின் எதற்கு இத்தனை சிரமம். நான் எனக்கு பொருத்தமான ஒரு இளவரசனை தேடி மணந்துக்கொள்கிறேன் போதுமா?" என்று கோபமாக ஆரம்பித்து இறுதியில் அழுகையை அடக்கிய குரலில் முடிக்க, அவள் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான் அவன்.


அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது அவள் சென்று விழ, உடனே அவளை கட்டிலில் சரித்து அவள் மீது படர்ந்தவன், "ஏதோ கோபத்துல பேசிட்டேன், அதுக்காக சொல்லி காமிக்காத! நான் சொன்னத விட நீ சொல்லும் போது உள்ளுக்குள்ள வலிக்குது இந்திரா" என்று பாவம் போல் சொல்ல, அவளையும் மீறி அவள் மனம் அவன் பக்கம் சாய ஆரம்பித்தது.


அதை முயன்று கடிவாளமிட்டு அடக்கியவள், அவனின் விழிகளைப் பார்க்காமல் முகத்தை திருப்பிக்கொண்டு,"என் மன வேதனை யாருக்கும் புரிவதில்லையே, நீயும் சராசரி ஆண்மகன்தான்" என்று வேதனைக் குரலில் சொல்ல, ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்தான் அவன்.


"என்னை மன்னிச்சிரு, நான் அப்படி பேசியிருக்க கூடாது ஏதோ ஒரு கோபத்துல... ச்சே! நான் ஒரு முட்டாள் இந்திரா. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிரு. நான் வேணா உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கவா?" என்று அவன் ஒரு ஆர்வத்தில் கேட்டுவிட, "ம்ம்..." என்றாள் அவளும் சிரிப்பை அடக்கிக்கொண்டு.


உடனே தன்னவளை அதிர்ந்துப் பார்த்தவன், "என்ன..." என்று அதிர்ச்சி குறையாத குரலில் கேட்க, "நீதானே கூறினாய், காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று. ம்ம் கேளு" என்று சொன்னவாறு அவனை தள்ளிவிட்டு மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு எழுந்து நின்றாள்.


வீராவோ மானசீகமாக தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான். 


'வாய கொடுத்து மாட்டிக்கிட்டியே வீரா' என்று தன்னைத்தானே நொந்தவாறு அவளை உதட்டைப் பிதுக்கியவாறு பார்த்தவன் வேறு வழியில்லாமல் அவளின் காலை நோக்கி குனியப் போக, உடனே அவனைத் தடுத்தவள் தன்னவனை இறுக அணைத்துக்கொண்டாள்.


"வேண்டாம் வீரா, நான் சொன்னால் எதை வேண்டுமானாலும் செய்து விடுவாயா முட்டாள்?" என்று அவள் கேட்டதும், "உன் கால்ல விழுறதுல அப்படி என்ன எனக்கு அவமானமாகப் போகுது? உனக்காக என்ன பண்ணவும் நான் தயாரா இருக்கேன்" என விழிகளில் காதலோடு சொன்னவன் அவள் இரு கன்னங்களை தாங்கிக்கொண்டான்.


இந்திராவின் முகமோ அவனின் வார்த்தைகளிலும் பார்வையிலும் செவ்வானமாய் சிவக்க, அதை ரசித்துப் பார்த்தவனுக்கு அந்த அறையின் தனிமையும் இருளின் குளிரும் தன்னவளின் அருகாமையும் உணர்ச்சிகளை கிளறியது.


அவனுடைய உடல் சூடேற, அவளுடைய இதழை நோக்கி நெருங்கியவன் அவளிதழோடு தன்னிதழை வைத்து உரச, பெண்ணவளோ விழிகளை அழுந்த மூடிக்கொண்டு அவனின் ஆடையை இறுக பிடித்துக்கொண்டாள்.


அதற்குமேல் ஆடவனால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. 


உடனே அவளிதழை கவ்விக்கொண்டவன் அதை சுவைக்க ஆரம்பிக்க, இந்திராவும் அவனுக்கு ஈடாக அவனிதழை சுவைக்கத் தொடங்கினாள்.


மூச்சுக்கு கூட அவகாசம் கொடுக்காமல் இருவரும் இதழ் முத்தத்தில் மூழ்கியிருக்க, தன்னவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டவன் மஞ்சத்தில் சரித்துவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.


வெட்கத்தில் சிவந்த முகத்தோடு அவள் விழிகளை மூடியிருக்க, அவளுடைய கழுத்தில் முகத்தைப் புதைத்தவன் முத்தத்தால் அவளை சிலிர்க்க செய்துக்கொண்டே கரங்களை அவளுடைய மேனியில் தவழவிட்டான்.


அவன் கரங்கள் அவளுடலில் அத்து மீற இந்திராவுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுத்தது. 


அவனுடைய இதழ்கள் அவளுடைய கழுத்திலிருந்து கீழிறங்க, பெண்ணவளும் தடுக்கவில்லை. இருவரின் ஆடைகளும் மெல்ல விலக ஆரம்பிக்க, தன்னிலை மறந்து எல்லையை  கடக்க ஆரம்பித்தனர் அந்த காதல் ஜோடிகள்.


அவளுடைய இடையை வளைத்து தன்னோடு நெருக்கிக்கொண்டு அவன் கழுத்தில் அழுந்த முத்தத்தைப் பதிக்க அப்போதுதான் தான் செய்யும் காரியமே வீராவுக்குப் புரிந்தது.


"அடக்கடவுளே!" என்று வெளிப்படையாக அதிர்ச்சியில் கத்தியவன் உடனே அவளை விட்டு விலகி ஆடையை சரி செய்ய, எழுந்தமர்ந்தள் தன்னவனை புரியாமல் பார்த்தாள்.


"என்ன நடந்தது, எதற்கு இந்த பதற்றம்?" என்று அவள் கேட்ட கேள்வியில் தன்னவளை திகைப்போடு பார்த்தவன், "இந்த பதட்டம் உன்கிட்டதான் வந்திருக்கணுமே, சரி பரவாயில்ல விடு! இப்போ இது போதும், கல்யாணத்துக்கு அப்பறம் மீதிய பார்த்துக்கலாம்" என்றான் அவளுடைய கன்னத்தைக் கிள்ளி.


இத்தகைய குணத்தை இந்திரா அவனிடத்தில் எதிர்பார்க்கவே இல்லை. வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆண்களுக்கு மத்தியில் வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என்கிறானே!


புன்னகையோடு கலைந்திருந்த மேலாடையை அணிந்தவாறு அவனருகே சென்றவள் அவன் மார்பில் முகத்தை புதைத்துக்கொள்ள, "சரி நான் போகணும், அப்பறமா பார்க்கலாம்" என்றுவிட்டு ஜன்னல் வழியே குதிப்பதற்காக எட்டிப் பார்க்க அடுத்தகணம் அவனுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிந்தன.


கீழே அவன் செல்லும் வழியில் ஏகப்பட்ட காவலாளிகள் நின்றுக்கொண்டிருக்க, "இப்போ என்ன பண்றது, போச்சு போச்சு" என்று தலையில் அடித்துக்கொண்டு வீரா புலம்ப ஆரம்பிக்க, கத்தியே சிரித்துவிட்டாள் பெண்ணவள்.


"இது தங்களுக்கு தேவைதானா? சரி இருக்கட்டு. இன்றிரவு இங்கேயே உறங்கு, நாளை செல்லலாம். என் அனுமதியில்லாமல் யாரும் என் அறைக்குள் நுழைய மாட்டார்கள் பயப்பட தேவையில்லை" என்று அவள் சொல்லிவிட்டு கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள்.


வீராவுக்கு வேறு வழி தெரியவில்லை. தரையில உறங்கப் போனவன் அவளின் முறைப்பைப் பார்த்துவிட்டு ஒருவித சங்கடத்தோடு கட்டிலில் சென்று அவளருகே படுத்துக்கொண்டான். 


அன்றிரவு முழுக்க வீரா நிம்மதியாக உறங்கினானோ இல்லையோ தன்னவனை அணைத்தபடி நிம்மதியாக உறங்கினாள் இந்திரா என்றுதான் சொல்ல வேண்டும்.


அன்றைய நாள் கழிந்து அடுத்தநாளும் விடிந்தது.


எந்தவொரு பணிப்பெண்களையும் இந்திரா அறைக்குள் விடவே இல்லை. யாழ்மொழியைத் தவிர.


அங்கு வீராவைப் பார்த்த யாழிற்கு மயக்கம் வராத குறைதான். 


"இளவரசி, என்ன இது? இது பற்றி அரசருக்கு தெரிந்தால் அவ்வளவுதான்" என்று அவள் பதற்றமாகக் கூற, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்ட வீராவும் இந்திராவும் அப்பட்டமாக அசடுவழிந்தனர்.


"அதனால்தான் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன் யாழ். நீதான் எனக்கு ஏதாவது ஒரு யோசனை சொல்ல வேண்டும்" என்று அவள் பாவம் போல் கேட்க, யாழ்மொழிக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.


மூவரும் இந்திராவின் அறைக்குள் ஒவ்வொரு மூலையைப் பிடித்து யோசனையோடு அமர்ந்திருக்க, அவளுடைய அறையை சுற்றி முற்றிப் பார்த்தவன், "என் குடிசையை போல பத்து குடிசைகள சேர்த்தா கூட இந்த அறையை நிரப்ப முடியாது போல" என்று ஆச்சரியக் குரலில் சொல்ல, மென்மையாக புன்னகைத்தாள் அவனவள்.


"தாங்கள் சம்மதம் சொன்னால் மொத்த அரண்மனையும் ஆட்சியும் தங்களுக்குதான், ஆனால் மறுக்கும் போது நானும் என்னதான் செய்ய முடியும்?" என்று இந்திரா சொல்ல, அதற்கு பதில் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டான் அவன்.


இந்திராவின் முகமும் இறுக, இவர்களின் சம்பாஷனைகளை கவனித்துக்கொண்டிருந்த யாழ்மொழியோ, "ஹ்ர்ம் ஹ்ர்ம்.. இளவரசி இப்போது  இவர் வெளியில் செல்ல நினைப்பது உசிதமல்ல. சூரியன் மறையும் வேளை ரகசிய வழிக்கு பக்கத்திலிருக்கும் காவலர்கள் உணவுக்காக சென்றதும் நமக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்று தன் யோசனையை சொன்னாள்.


அதைக் கேட்ட இந்திராவுக்கும் அவள் சொல்வது சரியென தோன்ற, தன்னவனை கேள்வியாகப் பார்க்க, அவனோ அலட்சியமாக தோளைக் குலுக்கியவன் அங்கிருந்த மெத்தையில் தொப்பென்று படுத்துக்கொண்டான்.


தன்னவனை ஒரு பெருமூச்சோடு பார்த்த இந்திரா, "யாழ், நீ சென்று உன் வேலைகளை கவனி. நான் தந்தையை சந்திக்க வேண்டும். அறைக்குள்ளேயே இருப்பதும் மற்றவர்களுக்கு சந்தேகத்தை தான் தூண்டும்" என்றுவிட்டு, "வீரா, நான் சென்றதுமே கதவை பூட்டிக்கொள், யார் கதவைத் தட்டினாலும் திறக்காதே! புரிகிறதா?" என வீராவின் புறம் திரும்பிச் சொல்ல, பூம்பூம் மாடு போல் எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தான் வீரா.


அதன் பிறகு இந்திராவும் யாழ்மொழியோடு அங்கிருந்து சென்றுவிட, கிட்டத்தட்ட யாழ்மொழி சொன்னது போல் சூரியன் மறையும் வேளை ரகசிய வழிக்கு பக்கத்திலிருந்த காவலர்கள் உணவுக்காக அங்கிருந்து சென்றிருக்க, ஒருவன் மட்டும் காவலுக்காக நின்றிருந்தான்.


"இளவரசி, இதுதான் சரியான சந்தர்ப்பம். இப்போதே வீராவை அழைத்துச் செல்லுங்கள்" என்று யாழ் தகவல் சொல்ல, "இப்படியே அழைத்துச் சென்றால் மாட்டிக்கொள்வோம், என்ன செய்வது..." என்று தீவிரமாக யோசித்தவளுக்கு மூளையில் மின்வெட்ட, உடனே வீராவைப் பார்த்து முப்பத்திரெண்டு பற்கள் தெரிய சிரித்து வைத்தாள் அவனவள்.


"இந்த சிரிப்பே சரியில்ல" என்று அவன் மிரட்சியாக சொல்ல, அடுத்த பத்து நிமிடங்களில் தன்னை சந்திப்பதற்காக அரண்மனையிலிருந்து  வெளியேறும் போது இந்திரா அணியும் மாயாவி ஆடையில் பாவமாக நின்றுக்கொண்டிருந்தான் வீரா.


"எனக்கு வேறு வழி தெரியவில்லை வீரா, இப்போதெல்லாம் தந்தையின் பாதுகாப்பு பலமாக இருக்கிறது. அவ்வளவு இலகுவாக செல்ல முடியாது. அதனால்தான்..." என்று தயக்கத்தோடு அவள் இழுக்க, "இது நமக்குள்ளயே இருக்கட்டும்" என்று சொன்னவன் திடீரென கதவு தட்டப்படும் சத்தத்தில் திடுக்கிட்டுப் பார்த்தான்.


"இந்திரா... இந்திரா..." என்ற அரசர் வேந்தனின் சத்தம் கேட்க, உள்ளேயிருந்த மூவருக்கும் அடி வயிறு கலங்கியது.


"இளவரசி சீக்கிரம் ஏதாவது செய்யுங்கள்..." என்று யாழ்மொழி பதற்றமாக சொல்ல, உடனே வீராவை இழுத்துக்கொண்டு சுற்றி முற்றி பார்த்தவளுக்கு அறை மூலையிலிருந்த அந்த ஒரு மறைவான பகுதி கண்ணில் பட்டது. 


நான்கு பக்கமும் பெரிய முந்தானையால் மூடப்பட்டு ஆடை மாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அந்த இடத்தைப் பார்த்தவள் உடனே வீராவை அதற்குள் மறைத்து வைத்துவிட்டு வேகமாக சென்று கதவைத் திறந்தாள்.


"தந்தையே..." என்று அவள் அழைத்த வித்ததிலேயே விழிகளை கூர்மையாக்கிய வேந்தன் உள்ளே இருந்த யாழ்மொழியை ஒரு பார்வைப் பார்த்தவாறு அறைக்குள் நுழைய, அவளோ மரியாதை நிமித்தமாக தலை குனிந்து ஒரு ஓரமாக நின்றுக்கொண்டாள்.


"இவள் அறையிலிருக்க கதவை பூட்டி வைத்திருப்பதற்கான காரணம் என்ன இந்திரா? என்னிடம் எதையாவது மறைக்கிறாயா என்ன?" என்று அவர் சந்தேகப் பார்வையோடுக் கேட்க, "அதெல்லாம் ஒன்றுமில்லை தந்தையே, காலையில்தானே தங்களை சந்திதேன். இப்போது மீண்டும் என்னை தேடி வந்திருக்கிறீர்களே! ஏதாவது முக்கியமான செய்தியா என்ன" என்று கேட்டாள் அவள் பதற்றத்தை மறைத்துக்கொண்டு.


"ஏன், மகளை சந்திக்க எனக்கு காரணம் வேண்டுமா என்ன?" என்று கேலியாகக் கேட்டவரின் விழிகளுக்கு சரியாக சிக்கியது வீரா மறைந்திருந்த அந்த இடம். 


ஏதோ ஒரு உருவம் அங்கு நிற்பது போல் அவருக்கு தோன்ற, தன் மகளின் நடவடிக்கைகளையும் கூர்ந்துப் பார்த்தாள்.


பதற்றமாக கைகளை பிசைந்துக்கொண்டு அவர் பார்த்த அதே இடத்தை ஓரக்கண்ணால் பார்ப்பதும் இதழை நாவால் அடிக்கடி ஈரமாக்குவதுமாக அவள் தடுமாறிக்கொண்டிருக்க, அரசர் வேந்தனுக்கு ஏதோ ஒன்று புரிய ஆரம்பித்தது.


"என் முடிவைப் பற்றி அவனிடம் கேட்டாயா இந்திரா, ஆட்சியை மறுக்க யாருக்குதான் மனம் வரும்?" என்று அவர் வேண்டுமென்றே இந்த கேள்வியைக் கேட்க, வீராவோ புருவ முடிச்சுகளோடு அவர் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தான்.


"அது... அது தந்தையே, வீராவுக்கு ஆட்சி பொறுப்பை ஏற்க விருப்பமில்லை. ஆட்சி வேண்டாமென்று..." என்று இந்திரா இழுக்க, இரு புருவங்களை உயர்த்தி ஆச்சரியப் பார்வை பார்த்த வேந்தனோ ஒரு தலையசைப்போடு அந்த அறையிலிருந்து வெளியேறப் போனார்.


யாழ்மொழியும் இந்திராவும் ஒருசேர நிம்மதி பெருமூச்சுவிட, சட்டென நின்றவர் ஓரக்கண்ணால் வீரா மறைந்திருந்த அந்த இடத்தை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வெளியேறியிருக்க, அதைக் கவனித்த யாழ்மொழிக்கு ஆச்சரியம்.


"அப்பாடா! எப்படியோ தப்பிச்சாச்சு" என்று வீரா சிரித்தவாறு சொல்லிக்கொண்டு வெளியில் வர, "எனக்கு என்னவோ அரசருக்கு தெரியுமென்றுதான் தோன்றுகிறது" என்ற யாழ்மொழி அதே ஆச்சரியத்தோடு அங்கிருந்து நகர்ந்தாள்.


அவள் சொன்னதைக் கேட்ட மற்ற இருவரும் அதிர்ந்து விழிக்க, அன்று இரவுக்குள் வீராவை அரண்மனையிலிருந்து வெளியேற்ற படாதபாடு பட்டாள் இந்திரா என்றுதான் சொல்ல வேண்டும்.


அதேநேரம் இங்கிலாந்தில்,


வேலைக்கு செல்வதற்காக தயாராகி கதவைத் திறக்கப் போன க்ரிஸ்டி, கதவு தட்டப்படும் சத்தத்தில் யோசனையோடு கதவைத் திறந்தாள்.


அடுத்தகணம் வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்து அவள் விழி விரிக்க, ஒருவித சங்கடத்தோடு அவளெதிரே நின்றிருந்தான் லியோ.


****************


தென்றல் தீண்டும் தாரகை.. எங்களோட நெக்ஸ்ட் டிரெக்ட் புக் இப்போ கிண்டல்ல Available ஆ இருக்கு.. 🙌 

IN link 👇

https://www.amazon.in/dp/B0FVF3NGM2


USA link 👇

https://www.amazon.com/dp/B0FVF3NGM2


மையவிழிப் பார்வையிலே Is now available in kindle store >>>

INDIA link👇

https://www.amazon.in/dp/B0FL2S9LYC


USA link 👇

https://www.amazon.com/dp/B0FL2S9LYC


Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚