விழிகள் 11
யாழ்மொழியோ அத்தனை கோபத்தோடு அவனின் சட்டையைப் பிடித்திருக்க, அவளின் இந்த எதிர்வினையை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை லியோ.
"ச்சீ... உனக்கு எல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா? என்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டாயே பாவி! நான் உனக்கு என்ன பாவம் செய்தேன், என்னை அழைத்தது இதற்குதானா, நீ எல்லாம் ராட்சசன், கல் நெஞ்சக்காரன், பெண்களை வதைக்கும்..." என்று கத்திக்கொண்டே சென்றவளின் வாயைப் பொத்தி சுவற்றில் சாய்த்தவனோ அவளுடைய வார்த்தைகளில் உண்டான கோபத்தை அடக்க விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.
"உன்னை இங்கயிருந்து அழைச்சுட்டு போகத்தான் நான் வந்தேனே, ஆனா இப்போ எனக்கே உன்னை விட்டுட்டு போனாதான் நல்லதுன்னு தோனுது" என்று இறுகிய குரலில் அவன் சொல்ல, அவளோ அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
அவன் தன்னை காப்பாற்றத்தான் வந்திருக்கிறான் என்பதை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"சத்தம் போடாத, அவங்க காதுல விழுந்துச்சுன்னா என்னாலயே உன்னை காப்பாத்த முடியாது. புரியுதா? இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரும் வந்துடுவாங்க அதுக்கு முன்னால நான் உன்னை இங்கயிருந்து வெளியில அழைச்சுட்டு போகணும்" என்ற லியோ மெல்ல அவளின் வாயைப் பொத்தியிருந்த கரத்தை விலக்க, சிலை போல் அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள் யாழ்மொழி.
அவள் கரத்தைப் பற்றியவன் சுற்றி முற்றி யாராவது வருகிறார்களா என பார்த்துக்கொண்டே தான் வந்த வழியை நோக்கி அழைத்துச் செல்ல, சரியாக அவன் திரும்பும் வழியில் நின்றிருந்தனர் ரொனெல்ட் மற்றும் வில்லியம்.
லியோ அங்கு இருவரையும் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. யாழ்மொழிக்கு அவர்களைப் பார்த்ததும் பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டது.
"வில்லியம் சொன்னது கரெக்டாதான் இருக்கு, சொன்ன மாதிரி நீ அவள அழைச்சுக்கிட்டு வந்திருக்க. வாவ்! ஆனா, எனக்கு ஒன்னுதான் புரியல, எந்த தைரியத்துல இவள அழைச்சுட்டு போகலாம்னு நினைச்ச?" என்று ரொனெல்ட் பற்களைக் கடித்தவாறு யாழ்மொழியைப் பார்க்க, அவளோ தன்னவனின் பின்னால் பயத்தோடு ஒளிந்துக்கொண்டாள்.
"சார், நான்தான் சொன்னேனே, ஆஃபீசர் லியோ இங்க திடீர்னு வந்திருக்காருன்னா அதுக்கு காரணம் இல்லாம இருக்காதுன்னு" என்று வில்லியம் சொல்லி சிரிக்க, அவருக்கோ கோபம் எகிறியது.
"ஹவ் டேர் யூ லியோ, நான் ஒன்னு ஆசைப்பட்டா எனக்கு அது வேணும். என்கிட்டயிருந்து அது பறிக்குற அளவுக்கு உனக்கு எங்கயிருந்து தைரியம் வந்துச்சு? நான் நினைச்சா இந்த நாட்டை விட்டே உன்னை அனுப்ப முடியும்" என்று அவர் விழிகள் சிவக்கப் பேசிக்கொண்டே வில்லியமின் கரத்திலிருந்த துப்பாக்கியை பிடுங்கி அவனை நோக்கி குறி வைக்க, முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவரை வெறித்துப் பார்த்தான் லியோ.
"நீங்க கோபப்படுறதுல நியாயம் இருக்கு, ஐ கென் அன்டர்ஸ்டேன்ட். பட், நான் உங்கள காப்பாத்தியிருக்கேன். அதுவும் இவளால வரப் போற ஆபத்துலயிருந்து" என்று யாழ்மொழியை சுட்டிக்காட்டி சொல்ல, மற்ற இரு அதிகாரிகளும் புரியாமல் விழிகளை சுருக்கினர்.
யாழ்மொழிக்கு அவர்கள் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதால் அந்த கலந்துரையாடல் எதுவும் சுத்தமாகப் புரியவில்லை.
"என்ன சொல்ற புரியல" என்று ரொனெல்ட் புருவங்களை நெறிக்க, "இத்தனை நாள் நிறைய பொண்ணுங்கள இங்க அழைச்சுட்டு வந்திருக்கீங்க, அதை எதிர்த்து நான் எதுவுமே சொல்லல. ஏன்னா, அவங்க எல்லாரும் சாதாரண மக்கள், நாம என்ன பண்ணாலும் அதை எதிர்த்து கேக்க அவங்களால முடியாது. பட் இவளோட விஷயத்துல அப்படி கிடையாது, அரண்மனையில இருக்குறவ.
இவ ஜஸ்ட் சேர்வன்ட் மட்டும் கிடையாது அங்கேயே வளர்ந்து இளவரசி கூட ரொம்ப நெருக்கமான தொடர்புல இருக்குறவ. எனக்கு கேள்விப்பட்ட வரைக்கும் ஏதோ ஒரு வகையில அரசருக்கு இவ தூரத்து சொந்தமா கூட இருக்கலாம். இப்போ நடந்தது அவருக்கு கேள்விப்பட்டிச்சுன்னா அவ்வளவுதான், நம்ம ப்ளான் எல்லாமே சொதப்பிடும்" என்று மூச்சு விடாமல் பேசிக்கொண்டே போனான் லியோ.
அவனின் வார்த்தைகளில் அந்த இருவரோ ஒருவர் முகத்தை ஒருவர் புரியாமல் பார்த்துக்கொண்டனர்.
"அரசருக்கு தெரிஞ்சா எங்களுக்கு என்ன, எங்கள எதிர்த்து அவரால கூட நிக்க முடியாது. அதனாலதானே இந்த நாட்டு வளங்கள கூட நாம அதிகமா சூரையாடுறோம்" என்ற ரொனேல்டின் இதழ்கள் ஏளனமாக வளைந்தன.
"அரசரோடு சேர்ந்து மக்களும் புரட்சி பண்ணாங்கன்னா நம்மளால கண்டிப்பா எதிர்க்க முடியாது சார், இவளுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா கண்டிப்பா அரசர் நமக்கு எதிரா திரும்புவாரு, அப்போ நாம இல்லீகல்லா பண்ண இம்பார்ட் பத்தியும் அவருக்கு தெரிய வரலாம். ஏற்கனவே மக்கள் நம்ம மேல ரொம்ப கோபத்துல இருக்காங்க.
அரசர் எதிர்க்க ஆரம்பிச்சா மொத்த மக்களும் தைரியமா நம்மள எதிர்த்து நிப்பாங்க. அதுமட்டும் இல்லாம அன்னைக்கு பேளஸ்ல நடந்த ஃபங்ஷன் அப்போதான் கவனிச்சேன், அரசருக்கு பக்கத்து குறுநில மன்னர்களோட கூட ஹெல்த்தி ரிலேஷன்சிப் இருக்கு. சோ, எல்லாமே நமக்கெதிரா திரும்பிரும். இந்த சின்ன பொண்ணால இத்தனை பெரிய பிரச்சனைய நாம ஃபேஸ் பண்ணணுமா, அதனால இவள விட்டுரலாம். ஐ ஹோப் யூ அன்டர்ஸ்ட் வாட் ஐ அம் ட்ரையிங் டூ சே சார் ரொனேல்ட்"
என்று வாய்க்கு வந்த பொய்களை அடுக்கடுக்காய் செதுக்கி அவன் ஒரு கதையை அடித்து விட, ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர் அந்த இருவரும்.
"இதை நீங்க முன்னாடியே சொல்லியிருக்கலாமே, எதுக்காக திருட்டுத்தனமா பின்னாடி வழியா வந்து இவள காப்பாத்தி போகணும்னு நினைச்சீங்க? சம்திங் ஃபிஷி" என்று வில்லியம் சந்தேகப் பார்வையோடுக் கேட்க, ஒருகணம் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் லியோவே திணறிவிட்டான்.
"அது... அது வந்து.. நீங்க ரெண்டு பேரும் போதையில இருந்தீங்க. உங்ககிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணி புரிய வைக்க முடியாதுன்னு நான் தப்பா நினைச்சுட்டேன். அரசருக்கு நாம கடத்தின விஷயம் தெரியுறதுக்குள்ள இவள எப்படியாச்சும் அவளோட இடத்துக்கு அனுப்பிரணும்னு தோனுச்சு. என்ட், திருட்டுத்தனம் பண்றது எல்லாம் உங்க புத்தி ஆஃபீசர் வில்லியம், நான் உங்க ஹையர் ஆஃபீசர். மைன்ட் இட்!" என்று அடக்கப்பட்ட கோபத்தோடு அழுத்தமான குரலில் சொன்னான் அவன்.
கை முஷ்டியை இறுக்கி கோபத்தை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு வில்லியம் பின்னால் நகர, யாழ்மொழியோ மூவரையும் மாறி மாறி பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆனால் ரொனேல்டிற்கு யாழ்மொழியைப் பார்க்கப் பார்க்க அவளை விட மனமே இல்லை.
"பழம் கையில இருந்தும் அதை டேஸ்ட் பண்ண முடியாத சிட்டுவேஷன்ல இருக்கேன், இருந்தாலும் நீ சொல்றத என்னால முழுசா ஏத்துக்க முடியாம இருக்கே ஆஃபீசர் லியோ" என்று ரொனேல்ட் அவளையே காமப் பார்வை பார்த்தவாறு ஒரு அடி முன்னே வைக்க, லியோவோ அவளை தன் பின்னே மறைத்துக்கொண்டான்.
"சார், இதை நான் பண்றது நம்ம நல்லதுக்குதான். இந்த நாட்டோட வளங்களுக்கு நம்ம நாட்டுல பெரிய விலை போகுது, அவ்வளவு ஈஸியா இதை விட்டுர முடியாது. நம்ம வேலைக்கு எதுவும் தடையா இருக்க கூடாது. இங்க நடந்தத பத்தி யாருக்கும் எதுவும் தெரியாம நான் பார்த்துக்குறேன். சின்ன பொண்ணு, மிரட்டினா பயந்துடுவா" என்று அவன் கேலியாக சொல்லி சிரித்தவாறு யாழ்மொழியைப் பார்க்க, அவளோ எதுவும் புரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தாள்.
"ஊஃப்ப்... ஓகே ஆஃபீசர் லியோ, இதை பத்தி அரசருக்கு தெரியக் கூடாது. அது உங்க பொறுப்பு" என்று அவளை அடைய முடியாத கோபத்தில் எரிச்சலாக சொல்லி விட்டு ரொனேல்ட் நகர்ந்துவிட, வில்லியமோ அவரின் பின்னே வேகமாக சென்றான்.
"சீக்கிரம் வா!" என்று லியோ அதற்குமேல் அங்கு நிற்காமல் அவளை அழைத்துக்கொண்டு தன் காரில் ஏறிக்கொள்ள, அவனை நோக்கி வேகமாக வந்தனர் வாசலில் நின்றிருந்த அதிகாரிகள் மூவரும்.
"சாரி சார், எங்களால அது யாருன்னு கண்டுபிடிக்க முடியல" என்று பயத்தோடு அந்த அதிகாரிகளில் ஒருவன் சொல்ல, "ஓஹோ... ஐ டூ சாரி ஆஃபீசர்ஸ். ஐ திங் அது ஹியூமனே கிடையாது. இட்ஸ் லைக் சம்திங் ஃபாரெஸ்ட் எனிமெல். இப்போதான் தெரிஞ்சது" என்றுவிட்டு அந்த உயரதிகாரியோ அவன் பாட்டிற்கு சென்றுவிட்டான்.
அந்த மூவரும் வாயைப் பிளந்துக்கொண்டு நின்றிருக்க, உள்ளே ரொனேல்ட்டின் முன் பதற்றமாக நின்றிருந்தான் வில்லியம்.
"சார், எனக்கு ஆஃபீசர் லியோ மேல சந்தேகமா இருக்கு. நீங்க எப்படி அந்த பொண்ண அழைச்சுட்டு போக விட்டீங்க?" என்று அவன் கேட்டதும், ரொனேல்ட்டின் இதழ்கள் கேலியாக வளைந்தன.
"அவன் சொன்னத நான் முழுசா நம்பினேன்னு நினைச்சியா, புல்ஷீட்! லியோவ நமக்கு எதிரியாக்குறது நமக்குதான் ஆபத்து. அவனுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தி. எப்போவும் நம்ம பக்கத்துல அவன வச்சிருக்கணும். இந்த முறை விட்டுடேன், பட் அவ்வளவு சீக்கிரம் அந்த பூவர் இந்தியன் கேர்ள விட்டுர மாட்டேன். சரியான சந்தர்ப்பம் வரும் போது நமக்கு தேவையானத நாம எடுத்துக்கணும்" என்று அவர் சொல்ல, வன்மப் புன்னகைப் புரிந்தான் வில்லியம்.
அதேநேரம் மின்னல் வேகத்தில் காரை செலுத்திக்கொண்டு வந்த லியோ சந்தைக்கு அருகே காரை நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க, பெண்ணவளோ கைகளைப் பிசைந்தவாறு தயக்கமாக அவனைப் பார்த்தாள்.
"இங்கயிருந்து அரண்மனைக்கு போயிருவேன்னு நினைக்கிறேன். இதுக்கப்பறம் அவங்க உன்னை தொல்லை பண்ண மாட்டாங்க" என்று அவன் உணர்ச்சிகளற்ற முகத்தோடு சொல்ல, "மிக்க நன்றி அதிகாரி, தாங்கள் தன்னை காப்பாற்ற வந்திருக்கிறீர்கள் என்பதை அறியாமல் ஏதேதோ தவறாக பேசிவிட்டேன். என்னை மன்னிப்பீர்களா?" என்று விழிகளை சுருக்கி கெஞ்சலாகக் கேட்டாள் அவள்.
அவனோ அவளை கூரிய பார்வைப் பார்த்தவன், "என் கார்லயிருந்து மொதல்ல இறங்குறியா, உன்கிட்ட பேச எனக்கு நேரமில்ல" என்று வழக்கம் போல் வெடுக்கென்று பதிலளித்தான்.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக அவனின் வார்த்தைளால் கோபப்படவில்லை அவள்.
தன்னை அறியாத ஒரு புன்னகை அவளுடைய இதழ்களில் தவழ, "எனக்கு இத்தனை பெரிய உதவியை செய்திருக்கிறீர்கள், என்றும் மறக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டு காரிலிருந்து யாழ் இறங்க, "உன்னை காப்பாத்தினதுக்காக என்னை நல்லவன்னு நினைச்சிராத, அவ்வளவு எல்லாம் நான் நல்லவன் கிடையாது" என்று லியோ எங்கோ பார்த்துக்கொண்டு பதில் சொன்னான்.
அவனின் பேச்சுக்கு மீண்டும் புன்னகையையே பதிலாக கொடுத்தவளுக்கு அப்போதுதான் அந்த ஒரு விடயம் ஞாபகத்திற்கு வர, "நான் ஒன்று கேட்கலாமா? அப்படி என்ன கூறினீர்கள் என்று அந்த இரு அதிகாரிகளும் என்னை தங்களுடன் வெளியேற சம்மதித்தார்கள்? தங்களின் மொழி புரியவில்லை அதனால்தான் கேட்கிறேன்" என்று ஆர்வமாகக் கேட்க, நெற்றியை நீவி விட்டவாறு அவளை பார்த்தான் அவன்.
"நீ அரசருக்கு உறவுக்கார பொண்ணு, உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா அரசர் எங்கள எதிர்த்து போர் புரிவாருன்னு பொய் சொன்னேன்" என்று அவன் இதழுக்குள் அடக்கப்பட்ட சிரிப்போடு சொல்ல, ஒருகணம் அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
சுற்றி முற்றி பார்த்தவள், "அப்பாடா! யாருடைய காதிலும் விழவில்லை. தங்களுக்கு எதிராக போர் புரிவாரோ இல்லையோ இந்த விடயம் மட்டும் அரசர் காதிற்கு சென்றால் எனக்கு எதிராக போருக்கு தயாராகுவார்" என்று கேலியாக சொல்ல, தன்னை மீறி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டான் ஆடவன்.
அவனுடைய இதழ்கள் விரிந்திருந்ததை பார்த்தவளுக்கு, 'சிரிக்கின்றானோ?' என்று கூட தோன்ற, அவள் தன்னை உற்று பார்ப்பதை கவனித்தவன் உடனே காரை உயிர்ப்பித்து மின்னல் வேகத்தில் பறந்து விட்டான்.
போகும் அவனையே வெறித்துப் பார்த்திருந்தவளுக்கு என்றும் இல்லாத ஒரு சந்தோஷம்.
அந்த இதமான உணர்வோடு அவள் அரண்மனைக்கு செல்ல, அங்கு பணிப்பெண்களின் அறையே பதட்டமாக இருந்தது.
"அய்யோ கடவுளே! இந்த யாழ்மொழி அரண்மனையிலிருந்து வெளியே சென்று வெகுநேரமாகி விட்டது. இத்தனை நேரமாகியும் அவள் வராமல் இருக்கிறாள் என்றால் நிச்சயமாக ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கியிருப்பாள் போலும்! இது மட்டும் அரசருக்கு தெரிந்தால், கடவுளே!" என்று பதற்றமாக ராதா அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருக்க, மற்ற பெண்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
"ஏன் இந்த விபரீதம் ராதா, இதெல்லாம் நமக்கு தேவைதானா! இளவரசியை கூட பல தடவை வெளியே அழைத்துச் சென்றிருக்கிறாள், இதையெல்லாம் எவரும் அறியவில்லை என நினைத்துக்கொண்டு இருக்கிறாளா? முட்டாள்தனம்" என்று அவர்களில் ஒருத்தி கோபமாகப் பேச, "இளவரசி..." என்று ஏதோ ஞாபகம் வந்தவளாக அதிர்ச்சியோடு சொல்லிக்கொண்டாள் ராதா.
மற்ற பெண்களோ அவளை புரியாமல் பார்க்க, "இளவரசியை விட்டால் இப்போது நமக்கு வேறு வழியே இல்லை. இதைப் பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்தலாம், அவர்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு வழியை கண்டுபிடிப்பார்கள்" என்றவள் வேகமாக அறையிலிருந்து வெளியேறப் போனாள்.
ஆனால் அடுத்தகணம், அவளுடைய கால்கள் சட்டென நிற்க, தன்னெதிரே நின்றிருப்பவளைப் பார்த்து "யாழ்..." என்று முணுமுணுத்தன ராதாவின் இதழ்கள்.
ஆம்.. அவளெதிரே யாழ்மொழி புன்னகையோடு நின்றுக்கொண்டிருக்க, சில கணங்கள் அவளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் தன்னை சுதாகரித்த மறுகணம் தோழியை தாவி அணைத்திருந்தாள்.
"பயந்தே போய்விட்டேன் யாழ், உனக்கு எதுவும் ஆகவில்லையே?" என்று ராதா பதற்றமாகக் கேட்க, "எனக்கு என்ன நேர்ந்து விட்டதென்று இத்தனை பதற்றமாக இருக்கிறாய் நீ! அரண்மனைக்குத் திரும்ப சற்று தாமதமாகி விட்டது. அவ்வளவுதான்" என்றாள் மற்றவள் சாதாரணமாக.
அவளின் தோழிக்கு அப்போதுதான் போன உயிரே திரும்பி வந்தது போலிருந்தது.
மற்ற பெண்களோ யாழ்மொழியை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட, தோழியை இழுத்துக்கொண்டு அறை ஜன்னலின் அருகே சென்று நின்றுக்கொண்டாள் ராதா.
"யாழ், ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. என்னிடம் மறைக்க முயற்சி செய்யாதே!" என்று கேட்ட ராதா, "இல்லை அது..." என்று பேச வந்த தோழியை தடுத்து அதிகாரிகள் இழுத்துச் செல்லும் போது கிழிக்கப்பட்ட அவளின் ஆடையில் ஒரு பகுதியை சுட்டிக்காட்டினாள்.
அதைப் பார்த்த யாழ்மொழியோ தலையில் வெளிப்படையாக அடித்துக்கொள்ள, தோழியை ஆர்வமாகப் பார்த்தாள் மற்றவள்.
**********
என்னோட மற்ற கதைகளை படிக்க 👇 (kobo app)
India link >>
Usa link >>>
'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>
India link 👇
https://www.amazon.in/dp/B0FLYRBNZG
Usa link 👇
https://www.amazon.com/dp/B0FLYRBNZG
என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>
INDIA link👇
https://www.amazon.in/dp/B0FL2S9LYC
USA link 👇
https://www.amazon.com/dp/B0FL2S9LYC
Comments
Post a Comment